தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகிய ஜெய்பீம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பிறகு அவர் தற்போது இயக்குனர் பாண்டிராஜன் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.


சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 10ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது









5 மொழிகளில் வெளியாகும் வெளியிடப்படும் இந்த படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் நீளம் 2 மணி நேரம் 31 நிமிடங்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 


எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிகர் சூர்யாவுடன்  முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். ரெடிங் கிங்ஸ்லி, ஜெயப்பிரகாஷ், வினய், சரண்யா பொன்வன்னண், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.