ஜீ தமிழின் சர்வைவர் நிகழ்ச்சி பல்வேறு திருப்பங்களுடன் ஒவ்வொரு நாளையும் கடத்தி வருகிறது. நேற்றைக்கு முந்தைய நாள் இம்யூனிட்டி டாஸ்கில் போராடி வெற்றி பெற்ற காடர்கள் அணி, கோழி, எண்ணெய் உள்ளிட்ட சமையலுக்கு தேவையான பொருட்களை பெற்றனர். ஒருநாள் விஜயமாக எதிரணியிலிருருந்து நந்தாவை அவர்கள் அழைத்துச் சென்றனர். அடுத்தடுத்து தோல்வியில் வேடர்கள் அணி சோர்ந்து போயுள்ளது. இந்த நிலையில், இப்போது புதுமுகங்களும் சர்வைவர் ஷோவில் எண்ட்ரி கொடுத்திருக்கிறார்கள்.  இன்றைய 20 எபிசோட் எப்படி இருந்தது என்று பார்ப்போம்..





நேற்று காடர்கள் அணியில் காபி போட்டு குடித்தனர். அதை கண்டதும் நந்தா உற்சாகமானார். இதையெல்லாம் பார்த்து பல நாள் ஆகியிடுச்சு, உங்களுக்காக ஒரு சின்ன பாடல் பாடுகிறேன் என்று ,‛கண்ணே கலை மானே பாடலை..’ பாடினார். முதல் நாள் இரவில் நந்தா இல்லாமல் இரவை கடத்த கவலையாக இருந்ததாக ஐஸ்வர்யா சொன்னதும், நந்தா பாடிய போது, ஐஸ்வர்யா கவலையாக இருப்பதாக காட்டியதும், அவர்களுக்குள் காதலா என்பதைப் போன்று காட்சிகள் இடம் பெற்றது. இது ஒன்று போதுமே... அவர்களுக்குள் ஏதோ ஒன்று இருக்கிறதோ.. என்று சிந்திக்கத் தோன்றுகிறது. அதற்கான லீடும் ஜீ தமிழே தந்தது. அதன்பிறகு நந்தா ட்ரைபுக்கு திரும்பியதும்தான் ஐஷ்வர்யாவும், ட்ரைபும் ஜாலியானார்கள்.


20-வது எபிசோட் ஆரம்பித்தமே மூன்றாம் உலகத்தைக் காட்ட ஆரம்பித்தார்கள். பார்வதியும், காயத்ரியும் பேசிக்கொண்டிருக்கும்போது வந்த ஓலையில் ஒரு டாஸ்க் வந்தது. அதன்படி, அவர்கள் ஒரு புதையலைக் கண்டுபிடிக்க வேண்டும் என தரப்பட்டிருந்தது. இருவரும் அலைந்து திரிந்து கண்டுபிடிப்பதுதான் இன்றைய முக்கால் வாசி எபிசோட் போனது. கடைசியாக பார்வதியும், காயத்ரியும் சேர்ந்து புதையலைக் கண்டுபிடித்தார்கள். “என்னையாடா எலிமினேட் பண்ணீங்க” என ஒரு எக்ஸ்ப்ரெஷன் கொடுத்தாரே பார்வதி.. ப்பா ரகம்..


பின்பு புதுவரவாக இனிகோ பிரபாகரும், வனேசாவும் நுழைந்தார்கள்.


இரண்டு ட்ரைபுக்கும் விசிட்டராக வந்தவர்கள் எல்லோருக்கும் அறிமுகமானார்கள். முக்கியமாக, இருவர் புதுசா ஃப்ரெஷ்ஷா வந்து எங்க கூட போட்டி போடுறது கஷ்டமாதான் இருக்கு என்று வெளிப்படையாகவே பேசினார்கள் (இருந்தாலும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு) 


இனிகோ பிரபாகர், வேடர்களின் உணவைச் சாப்பிட்டபோது, நல்லாவே இல்லையென்றாலும் நல்லாதான் இருக்கு என்னும் ரேஞ்சில் சாப்பிட்டார். பின்னால் கேமராவுக்கு கொடுத்த பைட்டில்தான் உண்மையைச் சொன்னார். நல்லா இல்லை ப்ரோ என்று. சாப்பிட்டு முடித்து, எல்லோருக்கும் இளநீர் பறித்துக்கொடுத்தார். 


புதுசாக எண்ட்ரி கொடுத்து இளநீரைப் பறித்து கொடுத்து, மனசையும் பறித்துவிட்டார் இனிகோ. இனி நாளைக்கு எபிசோடில்தான் யார் எந்த ட்ரைபின் உறுப்பினராகிறார்கள் என்பது தெரியும்.