சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள  ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகியுள்ளது.


பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’ எனப் இதனை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படம் சூர்யாவின் 40 வது திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தில்  சத்யராஜ், ப்ரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் சூர்யாவுடன் நடித்து வருகின்றனர். படம்  முன்னதாகவே முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தள்ளிப்போனது. இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது காரைக்குடி பகுதிகளில் நடைபெற்ற நிலையில், படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில் படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ வழியாக படம்  அடுத்த வருடம் பிப்ரவரி 4 ஆம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது..






முன்னதாக, சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில்  மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் படம் ‘வாடிவாசல்’.  சமீபத்தில் இந்த  படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களை கலக்கின. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை கொண்டாடும் விதமாக  படம் உருவாகி வருகிறது. மதுரை வட்டார வழக்குடன் , கிராமத்து இளைஞனாக  படத்தில் வலம் வருவாராம் சூர்யா. இந்த படத்தில் இடம்பெறும் மாடு பிடி காட்சிகளுக்காக சூர்யாவிற்கு சிறப்பு பயிற்சிகளும் கூட வழங்கப்பட்டுள்ளன. கலைப்புலி எஸ் தாணு  இந்த படத்தை தயாரித்து வருகிறார். ஃபஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் பதிவிட்ட தயாரிப்பாளர் “ நமது வரலாறு மற்றும் துணிச்சலைக் குறிக்கும் ஒரு சின்னத்துடன்  வாடிவாசல் படத்தின் போஸ்டரை வெளியிடுவதில்  நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், பெருமிதம் கொள்கிறேன்” என குறிப்பிட்டுருந்தார். வாடிவாசல் திரைப்படம்  சி.சு.செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்' என்னும்  நாவலை தழுவியே உருவாகி வருகிறது.