தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் நடிகர் சூர்யாவும் விஜய்யும் . சினிமாவில் சூர்யா நடிக்க வந்த காலக்கட்டத்திலிருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்கள். 1997 ஆம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த காம்போவிற்கு கிடைத்த வெற்றியின் விளைவு அடுத்ததாக ஃபிரண்ட்ஸ் படத்திலும் நடித்தனர். அந்த படமும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. சூர்யா மற்றும் விஜய் இருவருமே தங்களுக்கான தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளனர். விஜய், சூர்யா இருவரின் தந்தையும் சினிமா துறையில் ஸ்டார்ஸாக இருந்தவர்கள் என்பதால், சிறுவயது முதலே பரீட்சியம் ஆனவர்கள் , அதோடு சிறந்த நண்பர்களும் கூட. இந்நிலையில் ஸ்டார்டம் வேல்யூ கொண்ட இரண்டு நடிகர்களும் தற்போது சந்திப்பு நடத்தியுள்ளனர். அது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த திடீர் சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை அவரது ரசிகர்களை உற்ச்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 




சென்னை, பெருங்குடியில்  நேற்று விஜய், நெல்சன் இயக்கத்தில் நடித்துவரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.அதே வேளையில், சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இருந்துள்ளார். விஜய் மற்றும் சூர்யா இருவரும் ஒரே இடத்தில் இருப்பதை அறிந்து சந்திப்பதற்கான முடிவுகளை எடுத்துள்ளனர். சூர்யா மற்றும் விஜய் இருவரின் சந்திப்பு அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த சந்திப்பு மிகவும் தனிப்பட்ட சந்திப்பாக இருந்ததால் புகைப்படங்கள் எடுக்கப்படவில்லையாம். .மேலும் புகைப்படங்கள் கசிந்தால் படத்தில் அவர்களின் தோற்றம் குறித்தான தகவல்களும் கசிந்துவிடும் என்பதால் அதனை  படக்குழு மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.


 










 


சூர்யா மற்றும் விஜய் இருவரும் நேற்று மதிய சாப்பாட்டை ஒன்றாக சாப்பிட்டுள்ளார்கள்.அப்போது விஜய் , ஜெய் பீம் திரைப்படம் குறித்து பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் மீண்டும் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என சமூக வலைத்தள பக்கங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.







நெல்சன் தற்போது பெருங்குடி பகுதியில் பீஸ்ட் படத்தின் காட்சியை எடுத்து வருகிறார் என்பது குறித்த செய்திகளை முன்பே பார்த்தோம். இந்நிலையில் இயக்குநர் பாண்டிராஜனும் தற்போது பெருங்குடி பகுதியில் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக  ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மற்றும் நடிகர் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.