காலையில் இருந்து, அஜித் 61, தளபதி 68, பிகில் சியான் விக்ரம் என மாறி மாறி ட்ரெண்டாகி வர, சூர்யா 42 எனும் ஹேஷ்டாகும் வைரலாகி வருகிறது.






டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம்தான் சூர்யா 42. இதில் தீஷா பதானி, கோவை சரளா, யோகி பாபு ஆகியோர் உள்ளனர். படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானதும், இப்படமானது ஒரு காலத்தில் ஒரு ராஜா என்ற கதை கொண்ட வரலாற்று படம் என்று புரிந்தது. அதுவும் இப்படமானது 10 மொழிகளில் வெளியாகும் பான் இந்திய படமாக அமையும் என்றும் செய்தி வந்தது. ஆனால், கோவாவில் உள்ள செட்டை பார்த்தால் ஏதோ கடற்கடையில் நடத்தப்படும் திருமண போட்டோஷூட் போல் உள்ளது. முன்னதாக, கே.ஜி.எஃப் மியூசிக் கொண்ட அந்த மோஷன் போஸ்டர் ட்ரால் செய்யப்பட்டது.


 






சூர்யா 42 ட்ரெண்டாக காரணம், நடிகை தீஷா பதானியின் இன்ஸ்டா ஸ்டோரிதான். இதில், அவர் படப்பிடிப்பு நடக்கும் இடமான கோவாவிற்கு சென்று ஷூட்டிங்கான டே 1 துவங்கியது என்றும் பதிவிட்டுள்ளார். நடிகர் சூர்யாவிற்கு, தமிழகத்தில் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவின் மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக , கேரளா ஆகிய இடங்களிலும் ரசிகர்கள் உள்ளனர்.


 






அதற்கு ஏற்றவாரு , திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த பொன்னியின் செல்வன் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி மேடையில் ஏறி பேசியுள்ளார். அதனையடுத்து  சூர்யா என்ற பெயர் சொன்னதும் அரங்கமே நடுங்கும் வகையில் சத்தமிட்டுள்ளனர் கேரளாவில் உள்ள சூர்யா நடிகர்கள்.