Super Singer Krishaang : முதல்வரை சந்தித்த ‘சூப்பர் சிங்கர் சீசன் 8’ டைட்டில் வின்னர் கிருஷாங்.. மகிழ்ச்சி வெள்ளத்தில் குடும்பம்!

சூப்பர் சிங்கர் ஜுனியர் 2022 டைட்டில் வின்னராக பட்டம் வென்ற ஆர்.பி.கிருஷாங், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை குடும்பத்துடன் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.

Continues below advertisement

 

Continues below advertisement

சின்னத்திரை ரசிகர்களின் அபிமான ரியாலிட்டி ஷோகளில் ஒன்று சூப்பர் சிங்கர். பல இளம் பாடகர்களின் திறமைகளை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் மிகவும் சிறப்பான நிகழ்ச்சியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி விளங்குகிறது; இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான பாடகர்கள் பல நல்ல வாய்ப்புகள் பெற்று மிகவும் பிரபலமான பின்னணி பாடகர்களாக இருந்து வருகிறார்கள். 

 

 

சூப்பர் சிங்கர் 9 : 

பல ஆண்டுகளாக மிகவும் வெற்றிகரமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என இரண்டு வெவ்வேறு போட்டிகளாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர் சிங்கர் 9 சீனியர்களுக்கான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. 

 

 

சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் வின்னர் :


இதற்கு முன்னர் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 போட்டி நடைபெற்று அதன் இறுதிச்சுற்று கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த இறுதி போட்டிக்கு ட்ரினிடா, கிரிஷாங், நேஹா, அஃபினா மற்றும் ரிஹானா தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் வின்னர் பட்டத்தை ஆர்.பி.கிருஷாங் வென்றார். 

 

 

ஆர்.பி.கிருஷாங் முதலமைச்சரிடம் வாழ்த்து :

அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜுனியர் 2022 டைட்டில் வின்னராக பட்டம் வென்ற ஆர்.பி.கிருஷாங், மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை குடும்பத்துடன் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்; அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வாழ்த்துக்களை குவித்து வருகிறது. 

Continues below advertisement