உடல் ஆரோக்கியத்துடன், உடல பலமாக இருக்க வேண்டும் என்றால் தினமும் தவறாமல் உடற்பயிற்சியை செய்யுங்கள் என்கிறார் ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா நல்காரி.


இன்றைக்கு வெள்ளித்திரை நாயகிகளுக்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அதை விட அல்லது அதற்கு மேல் தான் சின்னத்திரை நாயகிகளுக்கும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஆண்டிற்கு ஒன்றிரண்டு படங்களில் நடிக்கும் சினிமா நடிகைகளைக் காட்டிலும் தினத்தோறும் நமது இல்லங்களுக்கு சீரியல் வாயிலாக வரும் நடிகைகளுக்கு மவுசு அதிகம்தான். 


குறிப்பாக சோசியல் மீடியாவிலும் நிறைய பாலோவர்ஸ்கள் உள்ளனர். அதனை எப்போதும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, நடிகர் மற்றும் நடிகைகள் பலரும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கின்றனர்.



இப்படி சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகைகளில் ஒருவர்தான் பிரியங்கா நல்காரி. தமிழ்  மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும், ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது சன்டிவியின் ரோஜா சீரியல் மூலம்தான். சின்னத்திரை சீரியல்களில் ஒருபுறம் பிரபலமாக இருந்தாலும், சோசியல் மீடியாவிலும் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பதோடு, அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுவருகிறார்.அதில் ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகிவருகிறது.


அந்த வீடியோவில் உடற்பயிற்சி செய்யும் உடையில் இருக்கும் பிரியங்கா தனது இரண்டு கைகளையும் தலையில் வைத்துக்கொண்டு, கால் கட்டை விரல்களை வைத்து பூமியில் இருந்து எழுந்து நிற்கிறார். சுமார் 30 விநாடிகள் அப்படி இருந்து விட்டு சகஜ நிலைக்குத் திரும்புகிறார்.  இதனையடுத்து இதேபோல் தினசரி தவறாமல் செய்யதால் உடல் பலம் பெரும் தவறாமல் செய்யுங்கள் என்று இன்ஸ்டா வீடியோவில் பதிவிட்டுள்ளார்.  இதனைப்பார்த்த ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர்.






இன்றைய சூழலில் சமீப காலங்களாகவே பொதுவாக திரைத்துறையில் இருக்கும் நடிகர் நடிகைகள் உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டி வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதிலும் ஒரு சில நடிகைகள், தங்களின் உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.