சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல தொடரான ‘வானத்தைப் போல’ சீரியல் நடிகர் மனோஜ் குமார் தனது மனைவியுடன் விபத்தில் சிக்கினார்.


சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் பெரும்பாலும் குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையிலே இருக்கும். அந்த வகையில், அண்ணன் – தங்கை பாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் வானத்தை போல தொடருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சின்ராஜ் –துளசியின் அண்ணன் தங்கை பாசம் ரசிகர்களை கவரும் வகையில் தொடர்ந்து இருந்து வந்தது.


Actress Manyaa | வானத்தைப்போல சீரியல் அண்ணனோட செல்ல தங்கச்சி.. புது துளசி பத்தி தெரியுமா?


இந்த தொடரில் சின்ராஜ். – துளசி கதாபாத்திரங்கள் மாறிய பிறகு, ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் ஏற்பட்டது. இருப்பினும், புதிய நடிகர்களும் தங்களது அனுபவமான நடிப்பால் சின்ராஜ் – துளசி கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி வருகின்றனர். 


இந்தத் தொடரில் முத்தையாவாக நடித்து வருபவர் இயக்குநர் மனோஜ் குமார்.  இயக்குநர் பாரதிராஜாவின் உறவினரான இவர், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், இவர் விபத்தில் சிக்கி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சாலிகிராமத்தில் வசித்து வரும் மனோஜ் குமார்  நேற்று காலை தனது மனைவி மற்றும் உதவியாளருடன் தேனிக்கு புறப்பட்டு சென்றார். கார், விக்கிரவாண்டி அருகே சென்றுக்கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த மூன்று பேரும் காயமடைந்தனர்.




இதனைத்தொடர்ந்து, அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனோஜ் குமார் விபத்தில் சிக்கியது ‘வானத்தைப் போல’ குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சீரியலின் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண