பிக்பாஸ் ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் நடந்த சோக சம்பவம் ஒன்றை சுஜா - சிவா ஜோடி பகிர்ந்துள்ளது.


விஜய்டிவியின் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ்.இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு, நிகழ்ச்சியை அடுத்தடுத்த சீசன்களுக்கு கொண்டு சென்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை ஒன்றிணைத்து விஜய் டிவி பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியையும்  ஏற்பாடு செய்து ஒளிப்பரப்பியது. இந்த நிகழ்ச்சியின் 2 ஆவது சீசன் அண்மையில் நடந்துமுடிந்தது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர்களாக அமீர் பாவ்னி, மற்றும்  வருணி- சிவா ஜோடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் பரிசுதொகையான 5 லட்சம் சரிசமமாக பிரித்து கொடுக்கப்பட்டது.






இந்த நிலையில் வருணி- சிவா பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடந்த சோக சம்பவம் ஒன்றை பகிர்ந்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேசி உள்ளனர். இது குறித்து பேசிய சிவா, “ பிக்பாஸ் ஜோடிகள் 2 ஹாரர் டான்ஸ் டாஸ்க் நடந்து கொண்டிருந்த போது சுஜா திடீரென மயக்கம் போட்டு விழுந்து சிறுநீரும் கழித்து விட்டார். அவரை மருத்துவரிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்த போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.


 






மருத்துவரிடம் தாங்கள் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பதை சொல்லி, தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்கலாமா என்று கேட்டோம். அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்றார். தொடர்ந்து நாங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டிருந்த போது, முக்கியமான டாஸ்க் ஒன்றில் சுஜாவுக்கு உடம்பில் இருந்து ரத்தம் வெளியேறியது. அதனைத்கொடர்ந்து மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்த போது சுஜாவை பரிசோதனை செய்த மருத்துவர் கரு கலைந்து விட்டதாக கூறினார். அதனால் உடனடியாக  நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் இரண்டு நாட்கள் கழித்து நிகழ்ச்சியில் சுஜா பங்கேற்றார்” என்று கூறினார். சோகத்தை மறைத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.