பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் ஒரு இசைக்குடும்பத்தில் பிறந்தவர் என்பது பலரும் அறிந்ததே. தந்தை கங்கை அமரன் மற்றும் அண்ணன் வெங்கட்பிரபுவை போலவே இவருக்கும் திரைப்படங்கள் மீதும் இசையின் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. ஜாலியான நடிப்பால் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் பிரேம்ஜியைப் பார்த்து அதிகம் கேட்கப்பட்ட கேள்வி, “எப்ப கல்யாணம்” என்பதாகதான் இருக்கும். 


42 வயதான அவருக்கு இன்னும் திருமணம் ஆகாததால், கோலிவுட் ரசிகர்கள் அவரிடம் அவ்வப்போது இந்த கேள்வியை எழுப்பி வந்தனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டீவான பிரேம்ஜி, ஸ்டோரி ஒன்றை பதிவிட்டு நெட்டிசன்களில் கண்களில் சிக்கியுள்ளார். 






கில்லாடி, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடி இருக்கும் பாடகி வினைத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரேம்ஜியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில், எட் ஷீரன் என்ற பிரபல பாடகரின் ‘பர்ஃபெக்ட்’ பாடலை சேர்த்து அந்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இதை பிரேம்ஜியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த பாடல் வரிகளில், ”என் கைகளுக்கு இடையில் இருட்டினில் உன்னுடன் நடனமாடுகிறேன்” என குறிப்பிடும்படி இருந்தது. இதனால், இது கண்டிப்பாக காதல்தான் என முடிவு செய்துவிட்ட நெட்டிசன்கள், பிரேம்ஜிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.



ஆனால், இந்த புகைப்படம் குறித்தும், காதல் குறித்தும் பிரேம்ஜியும், வினைத்தாவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதும் பதிவிடவில்லை. எனினும், பிரேம்ஜிக்கு திருமணம் என்றால் அவரது ரசிகர்களுக்கு அது ஹேப்பி செய்தியாகத்தான் இருக்கும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண