மிஸ்டர் தமிழ்நாட்டை மணந்த ஸ்ருதி!


சின்னத்திரையில் நாதஸ்வரம் , வாணி ராணி, கல்யாணப் பரிசு, பொன்னூஞ்சல், இறுதியாக பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியலில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஸ்ருதி சண்முக பிரியா. இவர கடந்த மாதம் மிஸ்டர் தமிழ்நாடு ரன்னர்-அப்பான வெற்றியாளரான அரவிந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 






 


லவ்வோ லவ்!


இவர்கள் இருவருக்கும் இந்த வருட தொடக்கத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அன்றிலிருந்து இருவரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களை காதல் ஸ்டேட்டஸால் நிறைத்து வருகின்றன. 90’ ஸ் கிட்ஸாக இருந்தால்  அவங்க இன்ஸ்டாகிராம் பக்கம் யாரும் போகாதீங்கப்பா....







கோயம்பத்தூர் மாப்பிள்ளை :


கோவையை பூர்வீகமாக கொண்ட அரவிந்த் மற்றும் ஸ்ருதி இருவரும் மறுவீட்டிற்காக சென்ற போது பல ரீல்ஸ்களை செய்து இன்ஸ்டா பேஜையே அதகளப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஃபிளைட்டில் அமர்ந்துகொண்டு ஸ்ருதி  “காரப்பொரி சாப்பிடணும் போலருக்கு” என கில்லி பட வசனம் பேசியது, வைரலாகி வருகிறது.







ஸ்ருதி மீண்டும் நடிப்பாரா ?


இறுதியாக பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவுக்கு அக்காவாக நடித்த ஸ்ருதி, அந்த சீரியலில் இருந்து  சில மாதங்களுக்கு முன்னதாக விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு முழுமையாக நடிப்பிற்கு முழுக்கு போட்டு , குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த போகிறாரா அல்லது மீண்டும் சீரியல்களில் தொடர்ந்து நடிப்பாரா என்பது குறித்து தெரியவில்லை