தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக ஒரு வருடம் கழித்து நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார். ஸ்ரேயாவின் இனிப்பான செய்தியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 


தமிழில் ’எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா . தொடர்ந்து மழை, ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக சிவாஜி மற்றும் கந்தசாமி, அழகிய தமிழ்மகன், திருவிளையாடல் ஆரம்பம், தோரணை உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்


தமிழில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகை ஸ்ரேயா. இவர் தமிழில் எனக்கு 20 உனக்கு  18 படம் மூலம் அறிமுகம் ஆனார். பின்னர் ரஜினியோடு சிவாஜி படத்திலும், விக்ரமின் கந்தசாமி படத்திலும், விஜயோடு  அழகிய தமிழ்மகன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் நடித்துள்ளார். திரைப்படங்களில் பிஸியாக இருந்த ஸ்ரேயா திடீரென திருமணம் செய்துகொண்டதாக கூறப்பட்டது




ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ்வும் காதலித்து வந்ததாகவும், அவரையே திருமணம் செய்ததாகவும் செய்தி வெளியானது.  ஆமாம் உண்மையதான் என்பது போல தன் கணவருடன் அவர் புகைப்படங்களையும் பதிவிட்டார். அதன் பின்னர் திரைப்படங்களில் இருந்து ஒதுங்கிய அவர், அவ்வபோது சோஷியல்  மீடியாவில் தலைகாட்டி வந்தார். இந்நிலையில் தற்போது மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார் ஸ்ரேயா.  


கொரோனா போன்ற கடினமான சூழல் நிலவிய கடந்த ஆண்டு தனக்கு அழகான தேவதை பிறந்ததாக குறிப்பிட்டுள்ளார் ஸ்ரேயா. ஒரு வருடமாக வாய்திறக்காமல் திடீரென இந்த இனிப்புச் செய்தியை வாரி வழங்கியுள்ளார் ஸ்ரேயா. இது தொடர்பான புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். ஸ்ரேயாவின் இந்த செய்தியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஸ்ரேயாவுக்கும் அவரது கணவருக்கும் அனைத்து தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.