பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முப்பது வருடங்களுக்கு மேலாக இந்தி திரைப்படத் துறையில் பணியாற்றி வருவதன் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போதைய செய்திகளின் படி ஆசியாவின் பணக்கார நடிகர் என்றும், உலகின் நான்காவது பெரிய பணக்கார நடிகர் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன. அவரது சொத்து மதிப்பாக மதிப்பிடப்பட்ட நிகர மதிப்பு $770 மில்லியன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.






பணக்கார நடிகர்கள்


டாம் குரூஸ், ஜாக்கி சான் மற்றும் ஜார்ஜ் குளூனி போன்ற சக பிரபல நடிகர்களை பின்னுக்குத் தள்ளி, ஷாருக்கான் உலக புள்ளிவிவரங்கள் வெளியிட்ட உலகின் எட்டு பணக்கார நடிகர்களின் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலின்படி உலகின் பணக்கார நடிகர் ஜெர்ரி சீன்ஃபீல்ட் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது நிகர மதிப்பு ₹82 பில்லியன் ($1 பில்லியன்). அமெரிக்க நடிகர் டைரி ஆஃப் எ பிளாக் வுமன் புகழ் டைலர் பெர்ரியும் $1 பில்லியன் உடன் அவரோடு இணைந்தார். அவர்களைத் தொடர்ந்து டுவைன் ஜான்சன் ₹64 பில்லியன் ($800 மில்லியன்) பெற்றார்.


தொடர்புடைய செய்திகள்: Jallikattu: சீறும் காளைகள்.. தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார் உதயநிதி..!


பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்ற நடிகர்கள்


டாம் குரூஸ்: ₹50 மில்லியன் ($620 மில்லியன்)


ஜாக்கி சான்: ($520 மில்லியன்)


ஜார்ஜ் குளூனி: ($500 மில்லியன்)


ராபர்ட் டி நிரோ: ($500 மில்லியன்)


பெரும் ஹாலிவுட் நடிகர்களையே பின்னுக்கு தள்ளிய ஷாருக் கான் நான்காவது இடத்தில் இருப்பது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அவரது பதான் திரைப்படம் வைரலாகி கொண்டிருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். 






பதான் திரைப்படம்


இந்த நிலையில், புர்ஜ் கலிஃபாவில் ஷாருக் கானின் திரைப்படமான ‘பதான்’ டிரெய்லர் காட்சிப்படுத்தப்பட்டது, அந்த நிகழ்வில் ஷாருக்கான் கலந்து கொண்டார். சித்தார்த் ஆனந்த் இயக்கிய இப்படம், ஆதித்யா சோப்ரா தயாரிப்பில், உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜனவரி 25, 2023 அன்று ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாகவும், ஜான் ஆபிரகாம் வில்லனாகவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கான வெளிநாட்டு முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. சமீபத்தில் படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர், இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இரண்டரை நிமிட நீளமான டிரெய்லர் ஷாருக்கானையும் தீபிகாவையும் ஒரு சக்திவாய்ந்த எதிரிக்கு எதிராக நிற்கும் உளவாளிகளாக காட்டுகிறது. இதன் மூலம் பல பிரச்சனைகளுக்கு பிறகு ஷாருக்கானின் மிகப்பெரிய கம்பேக்காக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.