ரஜினிகாந்த - லதா தம்பதியருக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், செளந்தர்யா ரஜினிகாந்த் என இருமகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு சமீபமாக தனுஷுடன் மனமுறிவு ஏற்ப்பட்டு இருவரும் பிரிந்தனர். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இருமகன்கள் உள்ளனர். இவர்களின் பிரிவுக்கு  பின் தாய் தந்தை என்ற முறையில் இருவரும் மாற்றி மாற்றி குழந்தைகளை கவனித்து வருகின்றனர். அவ்வப்போது லிங்கா மற்றும் யாத்ராவை நடிகர் தனுஷ் விருது விழாவிற்கு அழைத்து வருவதும் உண்டு.


ரஜினியின் இரண்டாவது மகள், செளந்தர்யாவிற்கு அஷ்வின் ராம்குமார் என்பவருடன் 2010-ல் திருமணம் நடந்தது. இவரது ரியல் நேம் ஷக்கு பாய் ராவ் ஆகும். இருவருக்கும் 2015-ல் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு வேத் கிருஷ்ணா என்று பெயர்  வைத்தனர்.






செளந்தர்யா, அவர் அப்பாவை வைத்து கோச்சடையான் (2014) என்ற படத்தை முப்பரிமாண வடிவில் கடின உழைப்பை போட்டு படத்தை இயக்கினார். படத்தின் சில பாடல்கள் கேட்க நன்றாக இருந்தது.  படத்திற்கு ஓவர் பில்ட்-அப் ப்ரோமோஷன் செய்ததால் மக்களிடையே பயங்கர எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியது. ஆனால் படத்தை பார்த்த ரஜினி ரசிகர்கள் செம டென்ஷன் ஆகினர் என்பது மறுக்கமுடியாத பழைய கதை.


அஸ்வின் ராம்குமாருடன் ஏற்ப்பட்ட  மன கசப்பினால், செளந்தர்யா ரஜினிகாந்த் 2016-ல் நீதிமன்றத்தில் விவகாரத்து தாக்கல் செய்தார். 2017-ல் விவாகரத்து தீர்ப்பு வந்ததால், இருவரும் சட்டரீதியாக பிரிந்தனர். அதே ஆண்டில் தனுஷை வைத்து விஜபி படத்தை இயக்கி ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார்.






பின் செளந்தர்யா விஷாகன் வணங்காமுடி எனும்  தொழிலதிபரை 2019-ல் மணந்தார். அந்த திருமணம் சென்னை லீலா பேலஸில் நடந்தது. தற்போது செளந்தர்யா கர்ப்பமாக உள்ளார். அவருக்கு சீமந்தமும் நடந்து முடிந்தது. இந்த சீமந்த நிகழ்ச்சி செளந்தர்யாவின் கணவர்  வணங்காமுடியின் ஈ.சீ.ஆர் இல்லத்தில் நடைப்பெற்றது. அதனையடுத்து அக்டோபர் மாதத்தில் குழந்தை பிறக்கும் என தகவல் வந்துள்ளது.


அதனால், ரஜினிகாந்தின் தீவர ரசிகர்கள் அவர் நான்காவது குழந்தைக்கு தாத்தாவாக போகிறார் என்ற செய்தியை  கேட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.