திரையரங்குகளில் வெளியாகும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம், கடந்த ஜூலை 22-ம் தேதி  ஓடிடியில் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது. இத்திரைப்படத்துக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.       

  


இந்நிலையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டரில், " சார்ப்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத  கதையைக்  கண்முன் நிறுத்துகிறது… வடசென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குனரும், நடிகர்களும், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்படவைக்கிறது! வாழ்த்துகள்" என்று பதிவிட்டார்.    


ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன், சஞ்சனா நடராஜன், பசுபதி, கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம்  புரொடக்ஸன்ஸ் கே 9 ஸ்டூடியோஸ்  படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு முரளி ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல இரட்டை சண்டை பயிற்சி இயக்குநர்களான அன்பறிவு மாஸ்டர்ஸ்  படத்தின் அதிரடி காட்சிகளை இயக்கியுள்ளனர்.  






 


முன்னதாக, இப்படத்தின் ட்ரைலரை நடிகர் சூர்யா தான் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், திரைப்படத்தை  பார்த்த பின்பு, தனது கருத்தை வெளியிட்டுள்ளார். 


முன்னதாக, கடந்த ஜூலை 23ம் தேதி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது 39 திரைப்படத்தின் டைட்டில்  மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. பீம் ஜீ என்ற பெயரிடப்பட்ட அந்த படத்தில் சூர்யாவுடன் பிரகாஷ்ராஜ், ரஜீஷா விஜயன், லிஜோ மோல் ஆகியோர் நடித்து வருகின்றனர்.






 


முன்னதாக, படத்தின் தலைப்புக்கு இயக்குநர் ரஞ்சித் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில்,  படத்தைத் தயாரிக்கும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் ராஜ்சேகர் பாண்டியன் படத்தின் தலைப்புக்கு நன்றி என இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு நன்றி தெரிவித்தார்.  


மேலும், வாசிக்க: 


Suriya 39 movie title: ‘ஜெய்பீம்’ தலைப்பு தந்தாரா பா.ரஞ்சித்? நன்றி சொன்ன இயக்குனர் ராஜசேகர் பாண்டியன்! 
     


‛ஜெய் பீம்’ உருவான வரலாறு... சூர்யா கையில் எடுக்கும் அம்பேத்கரிசம்!