கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும்  ‘சர்தார்’ படத்தின் ஸ்டோரி லைனும் ஜவான் படத்தின் கதையும் ஒன்றுதான் என தகவல் வெளியாகியுள்ளது.    


கார்த்தி நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம்  ‘சர்தார்’. இந்தப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது. அது என்னவென்றால் இந்தப்படத்தின் ஸ்டோரி லைனும் அட்லி இயக்கத்தில்  ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும்  ‘ஜவான்’ படத்தின் ஸ்டோரி லைனும் ஒத்துப்போகிறதாம். இதனால் ஷாருக்கான் மற்றும் கார்த்தி ரசிகர்கள் மத்தியில் ஒரு வித சலசலப்பு எழுந்தது.


இந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அந்த இரண்டு படங்களுக்கு எடிட்டிங் பணிகளை மேற்கொள்ளும் எடிட்டர் ரூபன் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் இந்த வதந்திக்கு கண்டனத்தை பதிவு செய்திருக்கும் அவர், இரண்டு படங்களின் கதையும் ஒன்று இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார். 



                                         



முன்னதாக, ட்விட்டர் வாசி ஒருவர்  ‘ஜவான்’ படத்தின் கதை இதுதான் எனக்கூறி பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்தப்பதிவில், “ ஜவான் படத்தில் அப்பாவாக வரும் ரா ஏஜண்ட் வில்லனால் வெளிநாட்டில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இதனையடுத்து அவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் வில்லனை பழிவாங்க வருகிறார். அப்போது தனது மகனான போலீஸை சந்திக்கிறார். இதுவே கதை என்று பதிவிட்டு இருந்தார்.


 






இந்தப்பதிவு பரவலாக பகிரப்பட்ட நிலையில், இதற்கு விளக்கம் அளித்த எடிட்டர் ரூபன், பள்ளி காலங்களில் நான் உட்பட பெரும்பான்மையான நபர்கள்,  ‘காந்த்’ என்ற வார்த்தை ஒப்பிட்டு ரஜினிகாந்த் மற்றும் விஜய்காந்த் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்று நம்பிக்கொண்டிருந்தனர்..  


 






அதன் பின்னர் நான் வளர்ந்து விட்டேன். ஆனால் இன்னும் சில பேர், குழந்தைப்பருவத்திலேயே சிக்கிக்கொண்டு நிற்கிறார்கள். இங்க ரா ஏஜண்ட் வைச்சிக்கிட்டு, இஷ்டத்துக்கு ராவா அடிச்சு விடக்கூடாது” என்று பதிவிட்டு இருக்கிறார்.