பொங்கலுக்கு வெளியாக தயாராக இருக்கும் 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்னர் மிகவும் பிரமாண்டமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட இந்த விழாவில் வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சரத்குமாரும் கலந்து கொண்டார். அந்த விழாவில் நடிகர் சரத்குமார் நடிகர் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


இது குறித்து பல விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வந்தது. அந்த விமர்சனங்களுக்கு தற்போது பதிலளித்துள்ளார் நடிகர் சரத்குமார். 


 



டஃப் கொடுக்கும் ரஜினிகாந்த் :


சமீப காலமாக தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஒரு விவகாரம் யார் அடுத்த சூப்பர் ஸ்டார்? என்ற கேள்வி. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை இத்தனை ஆண்டுகளாக தக்கவைத்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனது 70 வயதிலும் இன்றைய தலைமுறை ஹீரோக்களுக்கு நிகரான ஒரு ஹீரோவாக கெத்து காட்டிவருகிறார். வசூலிலும் டஃப் கொடுத்து வரும் ரஜினிகாந்தின் சாதனைகளை முறியடிக்க முடியாமல் இருக்கும் சூழ்நிலையில் இது போன்ற சர்ச்சையை ஏற்படுத்தும் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கருத்துக்கள் தேவையற்றது என திரை விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 


 






 


சரத்குமாரின் சர்ச்சைக்குரிய பேச்சு :


இந்த நிலையில் வாரிசு படத்தின் இதை வெளியீட்டு விழாவில் சரத்குமார் பேசுகையில் சூர்யவம்சம் திரைப்படத்தின் வெற்றி விழா சமயத்திலேயே விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என கூறியதற்கு பலரும் வெவ்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள். ரஜினி முன்னால் சூப்பர் ஸ்டார் என்றால் விஜய் தற்போதய சூப்பர் ஸ்டார் என சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள். இது குறித்து சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் சரத்குமார் தெளிவு படுத்தினார். 


 






 


ஊக்குவிக்க கூறினேன் :


சூர்யவம்சம் திரைப்படத்தின் வெற்றி விழாவில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவார் என கூறியதையே தான் வாரிசு பட விழாவிலும் கூறினேன். ஆனால் அதற்கு அர்த்தம் ரஜினிகாந்த் தற்போதைய சூப்பர் ஸ்டார் இல்லை விஜய் தான் என்பது இல்லை. அதே போல அஜித்குமாரும் சூப்பர் ஸ்டார் இல்லை என நான் குறிப்பிடவில்லை. எப்படி அமிதாப் பச்சன் ஒரு சூப்பர் ஸ்டாரோ அதே போல ஷாருக்கானும் ஒரு சூப்பர் ஸ்டார் தான். அதே போல இவர் தான் அவர் தான் என நான் குறிப்பிடவில்லை. வாழ்க்கையில் சாதிக்க நினைக்கும் அனைவருமே என்றுமே சூப்பர் ஸ்டார்கள் தான். அவர்களை ஊக்குவிப்பதற்காக தான் அப்படி குறிப்பிட்டேன் எனக் கூறினார் சரத்குமார்.