தென்னிந்திய சினிமாவில் மிகவும் கவர்ச்சியான மற்றும் திறமையான நடிகைகளில் ஒருவரானவர் சமந்தா. இவர், இப்போது பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதேநேரத்தில் ஹாலிவுட்டின் கதவுகளையும் தட்டுகிறார். தனிப்பட்ட முறையில் அவரும் அவரது  நாக சைதன்யாவும் கடந்த ஆண்டு பிரிவதாக அறிவித்தனர். அதன்பிறகு இரு பிரபலங்களும் திரையுலக வாழ்க்கையில் பிஸியாக உள்ளனர்.  குறிப்பாக சமந்தா ஆன்மீகம், உடற்பயிற்சி, சினிமா, வெப் சீரிஸ் என அனைத்து இடத்திலும் பம்பரமாக சுழன்று வருகிறார். 






சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார் சமந்தா. இன்னும் பல படங்களில் பிஸியாக நடித்துவரும் சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்த வந்த நிலையில், விஜயும் சமந்தாவும் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் பரவின. இதற்கு விளக்கம் அளித்த படக்குழு அனைவரும் நலமாக உள்ளதாக கூறியது. சாகுந்தலம் படத்தின் ஷூட்டிங்கை முடித்திருக்கும் சமந்தா ஹாலிவுட்டில் அரேஜ்மெண்ட்ஸ் ஆஃப் லவ் படத்தில் கமிட் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் பாலிவுட்டில் சல்மான்கான் நடிக்கும் 'No Entry Mein Entry'படத்திலும் சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளத்.'No Entry' படத்தின் தொடர்ச்சியாக வரும் 'No Entry Mein Entry'படத்தில் 10 நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் அதில் ஒருவராக சமந்தா ஒப்பந்தம் ஆகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 






படம்குறித்து தெரிவித்த இயக்குநர்  அனீஷ், "நோ என்ட்ரி 2' படத்தின் ஸ்கிரிப்டிங் முடிந்துவிட்டது. கதை சல்மானுக்கு பிடித்துவிட்டது. இது மிகவும் காமெடியான படம்.பல கிளைக்கதைகளும் உண்டு, இரண்டாம் பாகத்தில் என்ன நடக்கப்போகிறது என ரசிகர்களும் காத்திருக்கின்றனர் என்றார்.