பாகுபலி படத்தை இயக்கி இந்தியா முழுவதும் பிரபலமடைந்த இயக்குநர் ராஜமௌலி. அவர் தற்போது ஆர்ஆர்ஆர் (ரத்தம், ரணம், ரௌத்ரம்) என்ற படத்தை இயக்கியுள்ளார். 


இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், சமுத்திரகனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு கீரவாணி (மரகதமணி) இசையமைத்துள்ளார். 




தமிழில் லைகா நிறுவனம் வெளியிடும் இப்படத்தில் பாடலாசிரியர் மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே பாகுபலி படத்துக்கு வசனம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு இப்படம் வரவிருக்கிறது. இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியிடும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் ராஜமௌலி, லைகா நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


 






அப்போது பேசிய ராஜமௌலி, “உங்களிடம் இரண்டு மன்னிப்புகளை கேட்க வேண்டும். முதல் மன்னிப்பு என்னுடைய தமிழுக்கு. எத்தனை நாள்கள் ஆனாலும் இன்னமும் எனக்கு தமிழ் சரியாக வரவில்லை. தவறாகவே வருகிறது.


 



இரண்டாவது மன்னிப்பு, 3, 4 வருடங்கள் கழித்து சந்தித்தாலும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நான் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறேன். அதற்கு இரண்டாவது மன்னிப்பு” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Nayanthara New House: ரஜினிகாந்த் வசிக்கும் போயஸ் கார்டனில் புதிய வீடு வாங்கினார் நயன்தாரா..!