சன் டிவியில் வெளியான ரோஜா தொடர் மூலம் சின்னத்திரையில் பிரபலமடைந்தவர் நடிகை பிரியங்கா நல்கார்.


இவர் முன்னதாக நடித்த ’ரோஜா’ தொடர் தினம் இரவு 9 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிலையில், இந்த மாதத் தொடக்கத்தில் முடிவுக்கு வந்தது.


தெலுங்கு சின்னத்திரையைச் சேர்ந்த பிரியங்கா நல்கார், சுமார் நான்கு ஆண்டுகளாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்தத் தொடர் மூலம் தமிழ் சீரியல் உலகிலும் பெரும் பிரபலமடைந்தார்.  மேலும், சமூக வலைதளங்களிலும் படு ஆக்டிவாக உள்ள பிரியங்காவுக்கு அங்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. 


முன்னதாக ரோஜா சீரியல் முடிவுக்கு வந்ததை அடுத்து இவர் பகிர்ந்த உருக்கமான பதிவு, இணையத்தில் ட்ரெண்ட் ஆனது.


இந்நிலையில் தான் ஒருவருடன் கைக்கோர்த்திருக்கும் வகையிலான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து  ‘சீக்கிரம் திரும்ப வருவேன்’ என பிரியங்கா பகிர்ந்துள்ளார்.






இந்நிலையில், பிரியங்கா தன் அடுத்த சீரியல் அப்டேட் தந்துள்ளார் என உற்சாகமாக அவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகிர்ந்து வருகின்றனர்.


மேலும் இணையராக முதுகு காண்பித்து நிற்கும் நபருடன் இந்தப் படத்தில் பிரியங்கா கைக்கோர்த்துள்ள நிலையில் ஒருவேளை இது திருமண செய்தியாகவும் இருக்கலாம் என ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்து வருகின்றனர். பிரியங்கா நல்காரின் இந்தப் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலாகி லைக்ஸ் அள்ளி வருகிறது.


இதையும் படிங்க: FIFA 2022: மலையாள சூப்பர் ஸ்டார்கள் டூ பாலிவுட் நடிகர்கள் வரை... உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நேரில் கண்டுகளித்த பிரபலங்கள்!