அனு, அர்ஜுன் குடும்பத்து  பொண்ணு இல்லன்னு நிரூபிச்சிட்டா எல்லாம் முடிஞ்சிடும்னு நினைச்சா இப்போ அனுவை வக்கீலா மாத்தி கதையை எங்கயோ கொண்டு போய்க்கிட்டு இருக்கிறீங்களே என்று புலம்ப வைத்த சீரியல்தான் ரோஜா.


சன்டிவியின் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசகர்கள் மத்தியில் நலல வரவேற்பை பெற்று வரும் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது. பொய் சொல்லி தனது வீட்டிற்கு வந்த பெண், தனது பேத்தி இல்லை என்று அன்னபூரணி வடிவுக்கரசிக்கு தெரிந்து அனுவை வீட்டை விட்டு வெளியேற்விட்டனர். ஆனால் அவள் இப்போது அர்ஜூனின் எதிர் தரப்பு வக்கீலிடம் ஜூனியரக சேர்ந்துகொண்டார்.


அர்ஜூன் குடும்பத்தினர் அனுவுடன் மோதலை விட்டு விட்டு எதிர்தரப்பு வக்கீலுடன் கோர்ட்டில் வாதத்தினால் மோதிக்கொள்கின்றனர். இதில் அந்த வக்கீல் ஒவ்வொரு பிரச்சனையாக கிளப்ப அந்த பிரச்சினைக்கு தீர்வு தேடி அலைவதே அர்ஜுனின் வேலையாக இருக்கிறது. யப்பா சாமி போதும்டா என ஆகிறார்கள் ரசிகர்கள். வந்த காட்சிகளே மீண்டும் வருவதால், இந்த சீரியல் சலிப்பை ஏற்படுத்துகிறது என குமுறுகிறார்கள் சமூக வலைதளவாசிகள்


மேலும் அனு வில்லியாக இருந்த போது அவள செய்யும் வில்லத்தனத்திற்கும், அதற்கு அர்ஜூன் கொடுக்கும் பதிலடியும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இப்போது இரு வக்கீல்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் மோதலாக இருப்பதால், ஆக்ஷன் மற்றும் புத்தி கூர்மையுள்ள காட்சிகளுக்கு பதிலாக கோர்ட்டி வாதத்திலேயே எபிசோடுகள கடந்து விடுகினறனர்.


இதில் அர்ஜூன் ரோஜா இவரும் தங்கள் வீட்டிற்கு அறிமுகம் இல்லாத பலரை அழைத்து வந்த தங்க வைப்பதும், அவர்களுக்காக வாதாடுவதும் நல்ல நடவடிக்கைதான் என்றாலும் கூட, இதையே பார்த்துக்கொண்டிருந்தால் எப்படி அடுத்து என்ன என்று யோசிங்க டைரக்டர் சார் என்று சொல்ல தோன்றுகிறது என்கிறார்கள்.


நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் அனு வில்லியாக இருக்கும்போது கூட இவ்வளவு போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் காட்சிகள் இந்த சீரியலில் இருந்திருக்காது என ட்ரோல் செய்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்


 சீரியல் முழுவதும் ஒன்று கோர்ட், இல்லையென்றால், போலீஸ் ஸ்டேஷன் நடுவில் கொஞ்சம் அர்ஜூனின் வீடு என்றுதான் செல்கிறது. இதனால் பார்த்த காட்சிகளையே மறுபடியும் பார்ப்பது போலத்தான் தோன்றுகிறது. இந்த காட்சிகள் காரணமாக அர்ஜூன் ரோஜா இடையே நடக்கும் ரொமான்ஸ் காட்சிகளுக்கும் முட்டுக்கட்டை போட்டுவிட்டார் டைரக்டர். 


ரோஜாவுக்கும், அர்ஜுனுக்கும் கடைசி வரை குடும்ப வாழ்க்கையே இருக்காதா என சமூக வலைதளவாசிகள் பொங்கல் வைக்கிறார்கள். இப்படி சார் சார் என பேசிக்கொண்டே ரோஜாவுக்கு வயதாகிவிடும் எனவும் கலாய்க்கிறார்கள்