தமிழ் சினிமா அவ்வப்போது சினிமாவிற்கு புதுப்புது கலைஞர்களை அறிமுகப்படுத்தி வருகிறது அந்த வகையில் நெல்சன் அறிமுகப்படுத்திய ரெடின் கிங்ஸ்லியும் ஒருவர். கோலமாவு கோகிலா மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானாலும் முன்னதாக அவள் வருவாளா திரைப்படத்தின் பாடல் ஒன்றிலும் குழுவில் நடன கலைஞராக இருந்திருக்கிறார். அதன் பிறகு சொந்தமாக நடன பள்ளி ஒன்றை தொடங்கி , ஈவெண்ட்ஸ்களை எடுத்து நடத்தி வந்திருக்கிறார். அதே போல தீவுத்திடன் பொருட்காட்சிகளின் ஆர்கனைஸராகவும் இருந்திருக்கிறார். இப்படியான சூழலில்தான் இயக்குநரான , நெல்சன் கல்லூரி மாணவராக அறிமுகமாகியிருக்கிறார். நெல்சன் முதன் முறையாக இயக்கவிருந்த திரைப்படம் வேட்டை மன்னன் , இந்த திரைப்படத்தில் காமெடியனாக நடித்திருந்தாராம் கிங்ஸ்லி . ஆனால் அந்த படம் பாதியிலேயே தடைப்பட்டது.
சந்தானம் சார் அலுவலகத்துல அவரின் ஆரம்ப காலத்தில் உடன் இருந்த நண்பர்கள் , பள்ளி நண்பர்கள் உள்ளிட்டவர்கள்தான் இருப்பாங்க. அந்த அளவுக்கு அவர் எல்லோரையும் தன்னோட பயணத்துல மாற்றாம வச்சிருக்காரு. கொரோனா ஊரடங்கு சமயத்துல வேலை இல்லாவிட்டாலும் , அவங்க அனைவருக்கும் சம்பளம் கொடுத்தாராம். அதுமட்டுமல்லாம ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி , பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பரிசுகள் எல்லாம் கொடுப்பாராம் , தனது அலுவலக நண்பர்களை குடும்பத்துடன் டூர் அழைத்து செல்வது என தனது சொந்த குடும்பத்தை கவனித்துக்கொள்வதுபோல கவனித்துக்கொள்கிறாராம் சந்தானம் . இந்த காலத்தில் யார் இதையெல்லாம் செய்கிறார்கள் என மெச்சுகிறார் கிங்ஸ்லி.