தன் கையில் இருந்த செல்போனை பறித்த ரசிகரை  நடிகை ராஷ்மிகா மந்தனா சிரித்துக்கொண்டே கூலாக அணுகியது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.


 நடிகை ராஷ்மிகா மந்தனா தனது ரசிகர்களுடன் பழகும்போது எப்போதும் புன்னகையுடன் காணப்படுவார். நேற்று ( ஜூலை 10) அவர் மும்பையில் தனது கேரவேனுக்கு வெளியே நின்றிறுந்தார். அவரை காண அங்கு ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்த நிலையில், ராஷ்மிகா தனித்தனியே ஒவ்வொருவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஒரு ரசிகருடன் நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்த போது, ராஷ்மிகா தனது கையில் ரசிகர் ஒருவரின் செல்போனை வைத்துக் கொண்டிருந்தார். அப்போது உற்சாக மிகுதியில் இருந்த அந்த ரசிகர் அவரிடம் இருந்து செல்போனை சட்டென பறித்துக் கொண்டார். இதனால் ராஷ்மிகா அதிர்ந்து போனார். இருந்த போதிலும் அந்த தருணத்தை சிறப்பாக எதிர்கொண்டார். அவர் சிரித்துக்கொண்டு  இருந்ததுடன் அடுத்த நபருடன் புகைப்படம் எடுக்க தயாரானார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.






இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்காவின் அனிமல் படத்தின் படப்பிடிப்பை நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் முடித்தார். ராஷ்மிகா இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இது ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகிறது. இத்திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.  இதற்கிடையில் ராஷ்மிகாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா: தி ரூல் திரைப்படம் 2024ல் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஷ்மிகாவின் நடிப்பில் தெலுங்கில் வானவில் என்ற படமும் தயாராகி வருகிறது. முன்னதில் இப்படத்தில் சமந்தா நடிப்பதாக இருந்த நிலையில் அவர் தனிப்பட்ட காரணங்களால் படத்தில் இருந்து விலகி விட்டார். இதனையடுத்து இப்படத்தில் ராஷ்மிகா கமிட் செய்யப்பட்டார்,.


2018-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்தி நடித்த ‘சுல்தான்’ படங்களில் அறிமுகமானவர். இதனையடுத்து அவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். ராஷ்மிகாவின் க்யூட் புன்னகைக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு என்றால் அது மிகை ஆகாது. 


மேலும் படிக்க


Himachal Pradesh Rain: தத்தளிக்கும் இமாச்சல் பிரதேசம்? அடித்துச்செல்லப்படும் வாகனங்கள்: இன்னும் சிவப்பு ஆரஞ்சு அலெர்ட்!


இரத்தமும் நெருப்பும் சூழ நடந்து முடிந்த வாக்குப்பதிவு… மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று!