ராஷ்மிகா மந்தனா அணிந்து வந்த ஆடை சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அது குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 


பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா அண்மையில் மும்பையில் நடந்த விருது நிகழ்ச்சிக்கு வந்தார். சிவப்பு நிற ஆடையில் தேவதை போல வந்த ராஷ்மிகா அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதோடு, அங்கிருந்த புகைப்பட கலைஞர்களுடன் போட்டோவும் எடுத்துக்கொண்டார்.


 






அப்போது பொதுவெளியில் உடல் தெரியாமல் இருக்க, அவர் சற்றே ஆடையை சரிசெய்து உட்கார்ந்தார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதனைப்பார்த்த நெட்டிசன்கள் பலர் , “ ஆடை அசெளகரியமாக இருக்கிறது என்றால் ஏன் அப்படியான ஆடையை அணிந்து வருகிறீர்கள்” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் ஆடை என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை அதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 




ராஷ்மிகா மந்தனா கடந்த 2016 ஆம் ஆண்டு ‘கிரிக் பார்ட்டி’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். தெலுங்கு சினிமாவில், 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கீதா கோவிந்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.  கீதா அதைத்தொடர்ந்து டியர் காம்ரேட் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ராஷ்மிகாவிற்கு  ‘புஷ்பா’ படம் மேலும் பிரபலத்தை பெற்று தந்தது.


‘மிஷன் மஜ்னு’ படம்  மூலம் பாலிவுட்டிலிலும் எண்ட்ரி கொடுத்துள்ள அவர் தற்போது விஜயின்  ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இதைத்தவிர்த்து பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் நடிப்பில் உருவாகி வரும்  ‘குட் பாய்’, ரன்பீர் கபூருடன்  ‘அனிமல்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.