Rajinikanth meets shiva |இயக்குநர் சிவாவிற்கு தங்க சங்கிலி கிஃப்ட் செய்த ரஜினிகாந்த்! - காரணம் இதுதானாம்!

11 மணியளவில் சிவா வீட்டிற்கு சென்ற ரஜினிகாந்த் 2 மணிக்குதான் அங்கிருந்து கிளம்பினாராம்.

Continues below advertisement

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் , சிவா இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றுள்ளது. புரட்சியான படங்களில், வயதான தோற்றத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்துவந்த ரஜினிகாந்தை , இளமையான தோற்றத்தில் கண்ட ரசிகர்களுக்கு அண்ணாத்த படம் புத்துணர்ச்சியாக இருந்தது எனலாம். அண்ணாத்த படம் உருவான விதம் குறித்தும் , சிவா தன்னிடம் கதை சொல்லிய விதம் குறித்தும் ரஜினிகாந்த் ஹூட் பக்கம் வாயிலாக பகிர்ந்திருந்தார். 

Continues below advertisement



முன்னதாக போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்திற்கு சிவாவை அழைத்த ரஜினிகாந்த், சால்வை அணிவித்து அவரை கவுரவப்படுத்தியிருந்தார். இந்நிலையில்   ரஜினிகாந்த், இயக்குநர் சிவாவை நேரடியாக அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்துள்ளார். சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார் சிவா. அவர் வீட்டிற்கு சென்ற ரஜினிகாந்த் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம்  அண்ணாத்த படம் குறித்தும் சில தனிப்பட்ட விஷயங்களையும்  சிவாவுடன் பேசியுள்ளார். 11 மணியளவில் வீட்டிற்கு சென்ற ரஜினிகாந்த் 2 மணிக்குதான் அங்கிருந்து கிளம்பினாராம். இதில் சிவாவிற்கே கிடைத்த சர்ப்ரைஸ் என்னவென்றால் ,  சந்திப்பின் முடிவில் ரஜினிகாந்த் , இயக்குநருக்கு தங்க சங்கிலி ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார். இந்த தகவல் தற்போது தீயாக பரவி வருகிறது. ரஜினியின் இந்த செயல் இயக்குநர் சிவாவை மட்டுமல்ல ரஜினி ரசிகர்களையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

 


அண்ணாத்த படத்தின் பொழுது ரஜினிகாந்த் , உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டார். அவ்வபோது ஷூட்டிங்கை பிரேக் செய்துவிட்டு சிகிச்சைக்கு செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது. அது எல்லாத்தையும் சிரமமாக கருதாமல் , ரஜினியை கூடுதல் கவனத்துடன் அன்பாக பார்த்துக்கொண்டாராம் சிவா. இது குறித்து ரஜினியின் மகள் சௌந்தர்யாவே தனது ஹூட் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அந்த அன்பின் வெளிப்பாடாகத்தான் ரஜினி இந்த சங்கிலியை பரிசளித்திருப்பதாக கூறப்படுகிறது.



உலக அளவில் 1000 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட அண்ணாத்த திரைப்படம் முதல் வாரத்தில் 202.47 கோடி வசுல் செய்தது. 2 வது வாரத்தில் 26.32 கோடி வசுல் செய்தது. மூன்றாவது வாரத்தின் முதல் நாளில் 1.56 கோடியும், இராண்டவது நாளில் 1.70 கோடி வசுல் செய்தது. மூன்றாம் நாளில் 2.62 கோடியும், நான்காம் நாளில் 3.54 கோடியும் வசுல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் வாயிலாகவும் அண்ணாத்த திரைப்படத்தை பார்க்க முடியும். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது. தீபாவளி வெளியீடாக இத்திரைப்படம் திரைக்கு வந்தது. குடும்பங்கள் கொண்டாடும் படம் என்று தான் விளம்பரங்கள் செய்யப்பட்டன. ஆனால் படத்தின் முதல் காட்சி முடிந்ததும் படம் ரஜினி ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும், பெரும்பான்மையான ரசிகர்களுக்கு பிடிக்க வில்லை என்பது தெரிந்தது. ஆனாலும் அண்ணாத்த படத்தை பார்க்க மக்கள் திரையரங்களுக்கு வந்த வண்ணமே இருந்தனர். இந்த நிலையில் ரஜினி மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola