நடிகர் ரஜினிகாந்த், மோகன் லால் இணைந்து எடுத்துக் கொண்ட ஜெயிலர் படத்தின் லேட்டஸ்ட் க்ளிக் வெளியாகி வைரலாகியுள்ளது.


பல மொழி முன்னணி நடிகர்கள்


ஜெயிலர் படப்பிடிப்புத் தளத்தில் தமிழ் - மலையாளம் சூப்பர் ஸ்டார் நடிகர்களான ரஜினிகாந்த், மோகன் லால் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.


நடிகர் ரஜினிகாந்தின் 169ஆவது படத்தை கோலமாவு கோகிலா, டான், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் இயக்கி வருகிறார்.


பான் இந்தியா படமாகவும் வெவ்வெறு மொழியில் ஆதிக்கம் செலுத்தும் முன்னணி நடிகர்களுடனும் பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடனும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.


ஷூட்டிங் ஸ்பாட்ல என்ன நடக்குது?


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைக்க, மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் எனப் பலர் இணைந்துள்ளனர்.


இந்நிலையில் ஜெயிலர் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து புகைப்படங்கள் வெளியாகி அவ்வப்போது ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன. அந்த வகையில் ரஜினி - மோகன்லால் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று முன்னதாக வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகிறது.


ஜெயிலர் படப்பிடிப்பு முன்னதாக ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியில் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து ரஜினி , ஜாக்கி ஷெராஃப் ஆகியோரது வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தன.




தற்போது மோகன் லால் - ரஜினிகாந்த் இணைந்துள்ள இந்தப் படம் வெளியாகி கவனமீர்த்துள்ளது.


அடுத்தக்கட்ட படப்பிடிப்பு


தற்போது கன்னட முன்னணி நடிகர் சிவராஜ் குமார் தொடர்பான காட்சிகள் மங்களூருவில் படமாக்கப்பட்டு வருவதாகவும் ரஜினிகாந்த் இதற்காக தன் சொந்த ஊரான கர்நாடகா சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


மேலும் காந்தாரா படத்தின் வில்லன் தொடர்பான காட்சிகள் அமைந்துள்ள பண்ணை வீட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் 70 சதவிகித படப்பிடிப்பு ஏற்கெனவே நிறைவடைந்துள்ளது. வரும் மே மாதமோ அல்லது தீபாவளி ஸ்பெஷலாகவோ ஜெயிலர் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஜெயிலர் ரஜினி


முன்னதாக நடிகர் சிவராஜ் குமாருடன் அவரது வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது.


லுங்கி போன்ற உடையில் தன் இயல்பான தோற்றத்தில் அமர்ந்தபடி சிவராஜ்குமாரிடம் கதை கேட்கும் ரஜினியின் இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலானது.




ஓய்வுபெற்ற ஜெயிலராக நடிகர் ரஜினிகாந்தும், சிறைக்குள் நடக்கும் அதிரடி ஆக்‌ஷன் கதையாகவும் இப்படம் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க: காருக்குள் லிப் கிஸ் கொடுத்த பிரபல நடிகை... வைரலான வீடியோ.. உள்ளே இருந்தது யார் என கேள்வியெழுப்பும் ரசிகர்கள்..!