1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராஜமெளலியின் அடுத்த படம்..மகேஷ்பாபுவுக்கு நாயகியாக இவரா!

ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க இருக்கு படத்தில் நடிகரி பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Continues below advertisement

ராஜமெளலி

இந்திய சினிமாவின் வரலாற்றில் இயக்குநர் ராஜமெளலி எந்த காலத்திலும் தவிர்க்க முடியாத ஒரு இயக்குநராக உருவெடுத்துள்ளார். பாகுபலி 1 , 2 படங்களின் மூலம் அனைத்து திரைத்துறையினருக்கு வரலாற்று திரைப்படங்களை உருவாக்க பெரிய இன்ஸ்பிரேஷனாக ராஜமெளலி இருக்கிறார். இந்திய புராணக் கதைகளுக்கு உலகளவில் பெரிய மார்கெட் இருக்கிறது என்பதை இந்த படங்களின் வெற்றிகள் நிரூபித்து காட்டின. பாகுபலி ஒரு உச்சம் தொட்டால் ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் மற்றொரு வரலாற்று சாதனை படைத்தது. இப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் உலகளவில் வைரலாகி ஆஸ்கர் மேடை வரை ஒலித்தது.  வசூல் ரீதியாக ராஜமெளலி  படங்கள் தொட முடியாத உச்சத்தில் சிம்மசனமிட்டு அமர்ந்துள்ளன. ஒட்டுமொத்த திரையுலகமே ராஜமெளலியின் அடுத்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது. 

Continues below advertisement

மகேஷ் பாபுவுடன் சாகசக் கதை

ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு பின் ராஜமெளலி மகேஷ் பாபுவின் 29 ஆவது படத்தை இயக்கவிருக்கிறார். சுமார் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் மாபெரும் சாகசக்கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. அமேசான் காடுகளை மையமாக வைத்து இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட ராஜமெளலி திட்டமிட்டுள்ளதாகவும் முதல் பாகம் 2027 ஆம் ஆண்டும் இரண்டாம் பாகம் 2029 ஆம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இப்படத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இபப்டத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Continues below advertisement
Sponsored Links by Taboola