மக்களின் stress buster ஷோவான குக் வித் கோமாளியை சீசன் 3 யை விட்டு ராகுல் தாத்தா முதலில் வெளியேறியது ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது.


விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் என்றாலே பெரும் எதிர்ப்பார்ப்போடு தான் ரசிகர்கள் பார்க்க ஆரம்பிப்பார்கள். அப்படி அவர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றிய நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் விக் கோமாளி. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப்பார்க்கக்கூடிய இந்த நிகழ்ச்சி சீசன் 1 மற்றும் சீசன் 2 என வெற்றியைக்கண்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 தற்போது நடைபெற்றுவருகிறது.  இதில்பழைய கோமாளிகளான ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, சுனிதா ஆகியோரும் புதிய கோமாளிகளாக குரேஷி, பரத், ஷீத்தல், அருண், மூக்குத்தி முருகன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். புதிய குக்குகளாக கிரேஸ் கருணாஸ், மனோ பாலா, ரோஷினி, வித்யூலேகா, சந்தோஷ் பிரதாப், அம்மு அபிராமி, ராகுல் தாத்தா, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் என 10 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாகவும், ரக்ஷன் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தொடர்ந்துக் கொண்டு உள்ளார்கள்.





வழக்கம் போல இந்த சீசனும் மக்கள் மனதில் இடம் பிடித்துவருகிறது.  இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மிகவும் வயதான ஒருவர் தான் ராகுல் தாத்தா. எம்.ஜி.ஆரின் சமையல் காரராக பணியாற்றிய இவர், சினிமாவில் நடிக்க வேண்டும் ஆசையில் திரையுலகத்திற்கு என்ட்ரி கொடுத்தார்.  எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் நடித்துள்ளார். அதிலும் நானும் ரௌடிதான் படத்தில் நடித்ததின் மூலம் மிகவும் பிரபலமானவர் என்றே குறிப்பிடலாம். தற்போது சினிமாத்துறைக்கு அடுத்து புதிய அவதாரமாக தனியார் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துக்கொண்டார்.





முதல் நாள் தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருந்த இந்த ஷோவில், இந்தவாரம் எலிமினேசன் ரவுண்டாக இருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்றப் போட்டியில் நன்றாக சமைத்து, யூமினிட்டி பெற்று, ஏவிக்ஷனில் இருந்து தப்பியிருந்தார் கிரேஸ் கருணாஸ். இதனால் இந்த வாரம் இவர் மட்டும் போட்டியில் பங்கேற்காத நிலையில் மற்ற போட்டியாளர்கள் களம் இறங்கினர். இதில் இந்தவாரம் யூமினிட்டி சோலஞ்சாக பான் கேக் செய்ய சொல்லியிருந்தனர். ஆனால் அப்பொழுதே ராகுல் தாத்தா, “பான் கேக்கா அப்படின்னா என்னான்னு கேட்டது“. கோமாளியாக வந்த சுனிதாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருந்தப்போதும் போட்டியில் தொடர்ந்து பங்கேற்ற இவர் செய்த டிஷ் கொஞ்சம் சொதப்பிவிட்டது. இந்நிலையில் குக் விக் கோமாளின் சீசன் 3 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக வெளியேறினார் ராகுல் தாத்தா. இது அவர்களது ரசிகர்கள், போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.