தமிழ் திரையுலகில் நடன கலைஞராக அறிமுகமாகி நடிகர், நடன இயக்குநர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமைகளை ஒருங்கே பெற்றவராக திகழ்பவர்  ராகவா லாரான்ஸ். முனி படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் .அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது அதன் பிறகு அடுத்தடுத்த பாகங்களை இயக்கினார். காஞ்சனா சீரிஸ் என்றால் சொல்லவா வேண்டும் .


 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ்.கதிரேசன் தயாரித்து இயக்கும் படம் “ருத்ரன்”. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.இப்படத்தில் வீரத்திருமகன் படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்' பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர்.இதற்காக கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் அமைத்து  இப்பாடலின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் டிக்கிலோனா படத்தில் வெளியான ரீமிக்ஸ் பாடலான ‘காதல் மன்னனா’ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தற்போது உருவாகி வரும் ‘பாடாத பாட்டெல்லாம்' பாடலுக்கு நடன இயக்குனராக ஶ்ரீதர் கோரியோகிராஃப் செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. ருத்ரன் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.


படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.






  ருத்ரன் படத்தை தவிர அதிகாரம், துர்கா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் லாரன்ஸ். மேலும்  பி.வாசு இயக்கத்தில் உருவாகும் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.படத்தில் ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் நடிக்க , நடிகர் ராகவா லாரன்ஸ் ஒப்பந்தமாகியுள்ளார். சந்திரமுகி 2 படத்தினை  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. கடந்த மே  மாதமே இதற்கான படப்பிடிப்புகள் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக படம் தள்ளிபோனது. இந்நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகளுக்கான வேலைகளை முடுக்கி விட்டுள்ளாராம் இயக்குநர் பி.வாசு. சந்திரமுகி 2 ஆனது அடுத்த ஆண்டு திரைக்கு வர இருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திரமுகி முதல் பாகத்தை போலவே இதிலும் காமெடிக்கு பஞ்சமிருக்காது என  கூறப்படுகிறது. ஆனால் முதல் பாகத்தை விட இதில் த்ரில்லிங் காட்சிகளை கூடுதல் படுத்த திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர். ற்போது படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதால் விரைவில் நடிகைகள் உள்ளிட்ட பிற நடிகர்கள் , தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த செய்திகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக  சந்திரமுகியால் பழி வாங்கப்பட்ட வேட்டையன் , எப்படி மீண்டும் அவளை பழி வாங்குகிறான் என்ற ஒன் லைனை கொண்டுதான் சந்திரமுகி இரண்டாம் பாகம் உருவாகி வருவதாகவும் செய்திகள் வெளியாகியன. குறிப்பாக வேட்டையன்  கதாபாத்திரம் இதில் கொடூரமான பேயாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது . இதன் உண்மைத்தன்மை அடுத்தடுத்த அப்டேட்டுகள் மூலம் நமக்கு தெரியவரும்.