ராகவா லாரன்ஸ் தனது நடிப்பு மற்றும் நடனத் திறமைக்கு பெயர் பெற்றவர். இவர் இயக்கி நடித்த காஞ்சனா 1, காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.




அவர் நிறுவனமான 'லாரன்ஸ் அறக்கட்டளை’ மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி மற்றும் மருத்துவ செலவுகள் உள்ளிட்ட பல நல உதவி திட்டங்களை மற்றும் சமூக செயல்களை செய்து வருகிறார். இதனால் பொதுமக்களிடம் அவருக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. இப்போது, அவருடைய அந்த குணம் ​​நடன இயக்குனராக இருந்து நடிகராக மாறிய அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் பெர உதவியுள்ளது.


Also Read | AIADMK General Body Meeting LIVE: ஓபிஎஸ்-இபிஎஸ்., ஆதரவாளர்கள் மோதல்... அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பு!


சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் கவுன்சில் சமூக சேவைக்கான டாக்டர் பட்டத்தை லாரன்ஸுக்கு வழங்கி கௌரவித்துள்ளது. இது தனது ட்விட்டர் ப்ரோபைலில் "மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பொறுப்பான ஐக்கிய நாடுகளின் அமைப்பிற்குள் உள்ள ஒரு இடை - அரசு அமைப்பு" என்று தன்னை விவரிக்கிறது.




லாரன்ஸ் சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது தாயார் கண்மணி பட்டத்தைப் பெற்றார்.


இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய லாரன்ஸ், "சமூக சேவைக்கான டாக்டர் பட்டம் பெற்றது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். இந்த விருதை எனக்கு வழங்கிய சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சிலுக்கு மனமார்ந்த நன்றி. இது எனக்கு ஸ்பேச்ல், ஏனென்றால் என் சார்பாக என் அம்மா இந்த விருதைப் பெற்றார்.”


திரைப்பட முன்னணியில், தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன்,இயக்குனராக அறிமுகமாகும் ருத்ரன் படத்தின் வேலைகளை லாரன்ஸ் கிட்டத்தட்ட முடித்துவிட்டார். வில்லனாக நடிக்கும் சரத் குமாருக்கு எதிராக லாரன்ஸ் மோதும் ஆக்‌ஷன் என்டர்டெய்னராக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். கொடி புகழ் துரை செந்தில் குமார் இயக்கும் அதிகாரம் படத்திலும் அவர் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் திரைக்கதையை தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றி மாறன் எழுதியுள்ளார்.




இந்நிலையில், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சந்திரமுகி 2 படத்திலும் லாரன்ஸ் நடிக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்த முதல் படத்தின் ஒரு பகுதியாக இருந்த வடிவேலுவும் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பார், அதே நேரத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.