நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்தது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி லட்சக்கணக்கில் மணிகண்டன் என்பவர் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.


அவர் அளித்துள்ள புகாரில், “ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிப்பதற்கு நடிகை, நடிகர்கள் தேவை, ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என சிலர் போலி விளம்பரத்தை சமூக வலைதளங்களில் பரப்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிகண்டன் என்பவர் அந்நிறுவனத்தில் CEO ஆக இருப்பதாகவும் தங்கள் நிறுவனம் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை விநியோகித்தும் தயாரித்தும் புதிய திரைப்படங்கள் தயாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாய்ப்பிற்கு பொதுமக்களிடமிருந்து கூகுள்-பே மூலம் பணம் அனுப்ப வேண்டும் என மணிகண்டன் என்பவர் சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்து பண மோசடியில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




இந்த மோசடியில் ஆகாஷ் என்ற நபரிடம் 42 ஆயிரம் ரூபாய் ஏமாற்றி பணம் வசூலித்து உள்ளதாகவும், பின்னர் அவர் பட நிறுவனத்தில் வந்து கேட்டப்போது தான் தங்களுக்கு இந்த மோசடி குறித்து தெரியவந்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் அளித்துள்ள விளக்கம்


இது தொடர்பாக ராஜ்கமல் பிலிம்ஸ் ட்விட்டர் பக்கத்தில், எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டையும் நாங்கள் நியமிக்கவில்லை. இது தொடர்பான செய்திகள் வந்தால் நம்ப வேண்டாம்.மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


"ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜெண்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். எங்களது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன் மூலம் எச்சரிக்கிறோம்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




மேலும் வாசிக்க..


Modi Criticize: 56 இன்ச் சதையை துளைக்க 79 நாட்கள்: முதலைக் கண்ணீர் வடிக்கிறார் பிரதமர் மோடி? - வெளியான கடும் விமர்சனம்!