தமிழ் சினிமாவில் 2000 வது காலக்கட்டத்தில் சாக்லெட் பாயாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். அவர் தனது மனைவியுடன்  திருமண நாளை நேற்று கொண்டாடினர்.சமூக வலைத்தளங்கள் இந்த காதல் ஜோடிகள் பதிவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


காதல் ! 


மாதவன் நடிக்க வருவதற்கு முன்னதாக கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர் என்பது அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். தனித்திறன் வகுப்பு எடுத்த மாதவனிடம் சரிதா மாணவியாக வந்து சேர்ந்தார். தான் நினைத்த மாதிரி  விமான பணிப்பெண்  வேலை கிடைத்ததால் மாதவனுக்கு நன்றி சொல்லிவிட்டு , அவரை டின்னருக்கு அழைத்து சென்றிருக்கிறார். இப்படியாகத்தான் இவர்களது காதல் மலர தொடங்கியிருக்கிறது. அவர் தனது மாணவியான சரிதாவை காதலித்து கரம் பிடித்தார். இவர்களது திருமணம் கடந்த இவர் கடந்த 1999-ம் ஆண்டு நடைப்பெற்றது. திருமணமான பிறகுதான் மாதவன் நடிக்க வந்தார். இந்த தம்பதிகளுக்கு வேதாந்த் என்னும் 16 வயது மகன் இருக்கிறார். அவர் சர்வதேச நீச்சல் போட்டிகளில் கலந்துக்கொண்டு கலக்கி வருகிறார்.இந்த நிலையில் மாதவன் - சரிதா தம்பதிகள் நேற்று (ஜூன் 6 ) தங்களது 23 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர்.





திருமண நாள் வாழ்த்துக்கள் பொண்டாட்டி ! 


தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண நாளை முன்னிட்டு புகைப்படங்களை பகிர்ந்த மாதவன் “ நான் முன்பை விட இப்போது உன்னை அதிகமாக காதலிக்கிறேன். அண்ட் நான் காதலிக்க தொடங்குகிறேன்.. திருமண நாள் வாழ்த்துக்கள் பொண்டாட்டி “ என குறிப்பிட்டுள்ளார்.






23 வருடங்கள் ஆச்சா! 


இது குறித்து பதிவிட்ட மாதவனின் மனைவி “ 23 வருட ஒற்றுமை.  நேரம் எவ்வளவு விரைவாக பறக்குது. நான் உன்னை மிகவும் காதலிக்கிறேன். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள், என் அன்பே." என இவர்களின் சில புகைப்பட தொகுப்போடு பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த மாதவன் “ நான் இப்போதான் காதலிக்க தொடங்குகிறேன்.. முன்பை விட இப்போது உன் மீது பைத்தியமாக இருக்கிறேன் “ என பதிவிட்டுள்ளார்.