புஷ்பா 2 படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை அந்த தயாரிப்பு நிறுவனம் வழங்கி இருக்கிறது. 


இது குறித்து வெளியான அறிவிப்பில், புஷ்பா படத்தில் நடிப்பதற்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் தேவைப்படுகிறார்கள். இதற்கான ஆடிசன் திருப்பதியில் இன்று  (ஜூலை 3), நாளை மற்றும் (ஜுலை 4) மற்றும் ஜூலை 5 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


 







அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான புஷ்பா படம் அல்லுவின் ஸ்டைல், ராஷ்மிகாவின் க்ளாமர், சமந்தாவின் ஓ அன்ட்டாவா குத்துப் பாடல் எனப் பல விஷயங்களால் பிரபலமானது. அதே போல  அல்லு அர்ஜூன் தாடியை கோதும் ஸ்டைலும், தோளைத் தூக்கி நடக்கும் ஸ்டைலும் கடல் கடந்து ரசிகர்களைப் பெற்றது. பேன் இந்தியா திரைப்படம், பிரம்மாண்ட கதையம்சம், ஊ சொல்றியா பாடல் என பல எதிர்பார்ப்புகளுடன் புஷ்பா வெளியானது. 


 






ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அந்த அளவுக்கு படம் பூர்த்தி செய்யவில்லை. இதற்கிடையே படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கிவிட்டது படக்குழு. முதல் பாகம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தவில்லை என்பதால் இரண்டாம் பாகத்தை வெறித்தனமாக எடுத்துவிட வேண்டுமென படக்குழு மெனக்கெட்டு வருகிறது. முன்னதாக ராஷ்மிகா மந்தனா நடித்த வள்ளி கதாபாத்திரம் முடிவுக்கு வரும் என சொல்லப்பட்ட நிலையில், அந்தத் தகவலை தயாரிப்பாளர் மறுத்தார். இதனையடுத்து அல்லு அர்ஜூனுக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.