தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் - மகாலட்சுமி தங்களுடைய முதல் மாத திருமண நாளை கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.






கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி இணையம் முழுவதும் ஒரு தம்பதி திருமணம் பற்றிய பேச்சுக்களே அதிகம் இடம் பெற்றிருந்தது. அது வேறு யாரும் இல்லை பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் - நடிகை மகாலட்சுமி கல்யாணம் தான். சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி ரசிகர்களிடத்தில் நன்கு பிரபலமானவர் மகாலட்சுமி. ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற இவர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். ராதிகா நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியல் மூலம் மகாலட்சுமியின் சின்னத்திரை பயணத்தில் மிக முக்கியமானதாக அமைந்தது. 






இவர் தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தரன் சந்திரசேகரை திருமணம் செய்துக் கொண்டதாக வெளியான தகவலை பலராலும் கற்பனை செய்துக் கொள்ள கூட முடியவில்லை. அதிக பருமனாக இருக்கும் அவரை மகாலட்சுமி பணத்துக்காக திருமணம் செய்துக் கொண்டதாக இணையத்தில் கடுமையான விமர்சனம் எழுந்தது. ஆனால் இந்த திருமணம் காதல் திருமணம்  என்றும், பணத்துக்காக பண்ணிருந்தாங்கன்னா என்னை விட எத்தனை பேரு நல்லா இருக்காங்களே. என்னை எதுக்கு பண்ணனும் என ரவீந்தர் - மகாலட்சுமி நேர்காணல் ஒன்றில் விளக்கமளித்தனர். 



இதனிடையே பல யூடியூப் சேனல்களுக்கு இருவரும் பேட்டியளித்த நிலையில் விஜய் டிவி கொஞ்சம் வித்தியாசமாக இந்த தம்பதியினரை வைத்து “வந்தாள் மகாலட்சுமியே” என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளனர். இது நாளை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இதனிடையே இந்த ஜோடி தங்களுடைய முதல் மாத திருமண நாளை இன்று கொண்டாடியுள்ளனர். இதுதொடர்பாக போட்டோ ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு ”முதல் மாத திருமண நாள்.100 காரணங்களுக்காக மக்கள் நம்மை பார்த்து சிரிக்கிறார்கள். ஆனால் நான் மகிழ்ச்சியாக இருக்க ஒரே காரணம் நீ தான்..லவ் யூ முயலு” என தெரிவித்துள்ளார். 


இதையும் படிங்க: PS Box Office Collection: பொன்னியின் செல்வனின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஓப்பனிங் கலெக்‌ஷன்ஸ்..!