வாடகைத்தாய் மூலம் குழந்தை !


காதல் தம்பதிகளாக பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸை பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது! . தமிழில் 'தமிழன்' திரைப்படம் மூலம் நடிகையாக களமிறங்கியவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் ஹாலிவுட் நடிகரும் , பாப் பாடகருமான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிகள் இருவரும் இந்த ஆண்டு தொடக்கத்தில் அதாவது ஜனவரி மாதம் வாடகை தாய் மூலம் தங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்தனர். இது  சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.







குழந்தையுடன் தந்தையர் தினம் !


பிரியங்கா மற்றும் நிக் தங்களது குழந்தைக்கு இந்து மற்றும் கிருஸ்துவம் இரண்டையும் இணைத்து ' மால்டி மேரி சோப்ரா ஜோனாஸ்' என பெயர் வைத்தனர். குழந்தையை வீட்டுக்கு  இந்த வருடம் வரவேற்ற தம்பதிகள் , புகைப்படத்தை மட்டும் வெளியிடவே இல்லை. முன்னதாக வெளியிட்ட புகைப்படத்திலும் கூட குழந்தையின் முகத்தை மறைத்துவிட்டார் பிரியங்கா.இந்த நிலையில் நேற்று தந்தையர் தினத்தை முன்னிட்டு இருவரும் மகள் நடைபோடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.







நிக் ஜோனஸ் வாழ்த்து :


'முதல் தந்தையர் தினம் என்  மகளுடன். அப்பா மகளுக்கான‌ ஸ்னீக்கர்களுக்காகவும், என்னை அப்பாவாக மாற்றியதற்காகவும்  பிரியங்கா சோப்ராவிற்கு நன்றி, நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்.  அனைத்து அப்பாக்கள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்களுக்கும்  தந்தையர் தின வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.







பிரியங்கா சோப்ரா வாழ்த்து :


" முதலாவது தந்தையர் தின வாழ்த்துக்கள் என் அன்பே.  நமது குழந்தையுடன் உன்னைப் பார்ப்பதுதான் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி." என குறிப்பிட்டுள்ளார்.