கோலிவுட் மற்றுமில்லாமல் டோலிவுட், பாலிவுட் ரசிகர்களிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது எல் சி யு என்கிற லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ். சூர்யா, கார்த்தி, கமல், விஜய் என தமிழ் சினிமாவின் ஸ்டார் அந்தஸ்து பெற்ற நடிகர்களை ஒரே படத்தில் எதிர்பார்க்க முடியும் என்றால் அது எல்.சி.யு வில் மட்டுமே சாத்தியம். லோகேஷ கனகராஜின் இந்த முயற்சி இந்திய சினிமாவிலேயே ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கியுள்ளது. லோகேஷைத் தொடர்ந்து தற்போது பாலிவுட்டிலும் சினிமேடிக் யுனிவர்ஸ் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார் இயக்குநர் ஒருவர். பாலிவுட்டில் ஹனுமான் திரைப்படத்தின் இயக்குனர் ப்ரஷாந்த் வர்மா சினிமேடிக் யுனிவர்ஸ் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தத் தொடரில் முதல் படமான ஹனுமான் அடுத்த ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.


 ப்ரஷாந்த் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் அடுத்த பாகமாக ஆதீராவும் அடுத்த ஆண்டில் வெளியாகும்  வெளியாகும் என தகவல் தெரிவித்தார் ப்ரஷாந்த்.


சூப்பர் ஹீரோ யுனிவர்ஸ் உருவாக்குவதே எனது ஆசை


தனக்கு சின்ன வயதில் இருந்தே சூப்பர் ஹீரோக்களின் மேல் அபரிமிதமான காதல் இருந்ததாகவும். சூப்பர் ஹீரோக்களை வைத்து ஹாலிவுட்டில் எடுக்கப்படும் படங்களைப்போல் இந்தியாவிலும் எடுக்கவேண்டும் என தனது நீண்ட நாள் கனவை வெளிப்படுத்தினார். மேலும் இந்திய கலாச்சாரத்தில் இருக்கும் தொன்மக்கதைகளில் வரும் கதாபாத்திரங்களை வைத்து இந்த சினிமேடிக் யுனிவர்ஸை தான் உருவாக்க திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளார் ப்ரஷாந்த்.


மற்றொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இந்த படங்களில் ஆர்வமுள்ள கலைஞர்கள் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளையும் வழங்கியுள்ளார் ப்ரஷாந்த். கதாசிரியர்கள், திரைக்கதை ஆசிரியர்கள், படத்தொகுப்பாளர்கள், வி.எஃப்.எக்ஸ் ஆர்டிஸ்ட் ஆகியவர்கள் இந்த படங்களில் வேலை செய்ய ஆர்வமிருப்பவர்கள் இணைந்துகொள்ளலாம் என்றும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


இதனைத் தொடர்ந்து இந்திய சினிமாவில் மேலும் பல இயக்குனர்கள் புதிய ஐடியாக்களுடன் தங்களது சினிமேடிக் யுனிவர்சை உருவாக்கத் தொடங்கிவிட்டார்கள்.


லியோ


லோகேஷ் கனகராஜ் தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார். விஜய், த்ரிஷா, மிஸ்கின் , கெளதம் மேனன் சஞ்சய் டத் ஆகிய நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறாரகள். இந்தப் படம் எல். சி. யு வில் இடம்பெறுமா என்கிற கேள்வி அனைவரிடத்திலும் உள்ளது . ஆனால் அந்த பதிலைத் தெரிந்துகொள்ள படம் வெளியாகும் வரை காத்திருப்பதைத் தவிர ரசிகர்களுக்கு  வேறு வழியில்லை. இந்தப் படத்தைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி 2 திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கலாம். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கடைசி படம் என்று சொல்லப்படும் படத்தையும் இயக்கவிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.