பொன்னியின் செல்வன் :


பிரம்மாண்ட பொருட்செலவில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்னும் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பாரதிராஜா போன்ற பல இயக்குநர்கள் இந்த நாவலை படமாக எடுக்க வேண்டும் என போட்டி போட்டுக்கொண்டிருந்த சூழலில் படத்தை கெத்தாக கையில் எடுத்திருகிறார் மணிரத்தினம். காதல் சப்ஜெட்டுகளில் மணிரத்தினம் அசைக்கமுடியாத ஆடியன்ஸை வைத்திருக்கிறார்.


இந்த நிலையில் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று சிறப்புமிக்க படத்தை எடுத்திருப்பது  ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் கவனத்தை ஈர்த்துள்ளது. பாகுபலி இந்திய சினிமாவில் ‘ பிரம்மாண்டம் ‘ என்ற புதிய மைல் கல்லை தொட்ட திரைப்படம். இந்த சூழலில் பொன்னியின் செல்வன் அந்த சாதனையை முறியடிக்குமா என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பு .






விக்ரம் தோற்றம் வெளியீடு :


பொன்னியின் செல்வன் இரண்டு பாகமாக எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகம்  வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், கார்த்தி, பார்த்திபன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.பொன்னியின் செல்வன் படத்தில், சுந்தர சோழராக, பிரகாஷ் ராஜ் நடிக்க, சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், கார்த்தி, வந்தியத்தேவனாக, ஆதித்த கரிகாலனாக விக்ரம், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார் நடித்து வருகிறார். அதேபோல் குந்தவையாக, த்ரிஷாவும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி, ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம் நடித்துள்ளனர்.  தற்போது படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் தோற்றத்தையும் படக்குழுவினர் வெளியிட தொடங்கியுள்ளனர். முன்னதாக  திரிஷாவின் தோற்றம் . கார்த்தி, ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்களின் தோற்றம் வெளியானது. இந்த நிலையில் ஆதித்த கரிகாலனாக நடித்திருக்கு விக்ரமின் தோற்றம் வெளியாகியுள்ளது. இதனை வெளியிட்ட படக்குழுவினர் “சோழப் பட்டத்து இளவரசரை வரவேற்கிறோம்! கடுமையான போர்வீரன். காட்டுப் புலி. ஆதித்த கரிகாலன்!” என குறிப்பிட்டுள்ளனர்.






 


விரைவில் டீசர்:



தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படம் எடுக்கப்பட்டுள்ளது.  எடிட்டிங் பணியை ஸ்ரீதர் பிரசாத் மேற்கொள்கிறார்.  ரவி வர்மன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார், படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்தினம் தயாரிக்கிறார்.  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.படத்தின் டீசரை பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இது குறித்த அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.


 


 


 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண