பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களான குந்தவையும் நந்தினியும் எதிரிகளாக இருப்பினும் ஒன்றாக எடுத்துக்கொண்ட ஒரு அழகான செல்ஃபி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


 



திறமைசாலிகளின் சங்கமம்:


சினிமா ரசிகர்களின் பல நாள் எதிர்பார்ப்பு திரையில் செப்டம்பர் 30ம் தேதியன்று வெளியாகப்போகிறது என்பது அவர்களின் உச்சகட்ட சந்தோஷம். கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை தழுவி அதே பெயரில் இரண்டு பாகங்களாக படமாக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். இப்படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாக உள்ளது. இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு என ஏராளமான திறமையான நடிகர்களின் பட்டாளம் இதில் இணைந்துள்ளார்கள். 


 






 


செல்ஃபீ சொல்லும் கதை :  


பொன்னியின் செல்வன் படத்தின் விளம்பர பணிகள் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதற்காக படக்குழுவினர் ஷெட்யூல் போட்டு இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விளம்பர பணியில் ஈடுபட்டு இருக்கும் திரிஷா ஒரு நிகழ்ச்சியில் ஸ்வாரஸ்யமான தகவல் ஒன்றினை பகிர்ந்தார். மணி சார் குந்தவையாக நடிக்கும் என்னையும் நந்தினியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய் இருவரையும் பேசிக்கொள்ள கூட கூடாது என கூறுவார். கதை படி நாங்கள் இருவரும் எதிரிகள். ட்ரைலர் காட்சியில் நங்கள் இருவரும் ஒரே ஃபிரேமில் மோதிக்கொள்ளும் காட்சிகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது அதனால் தான். திரையின் முன்னால் மட்டுமே நாங்கள் இருவரும் எதிரிகள் திரைக்கு பின்னால் மிகவும் நல்ல தோழிகள் என்றார். அதற்கு உதாரணமாக குந்தவையும், நந்தினியும் படப்பிடிப்பின் போது எடுத்து கொண்ட ஒரு செல்ஃபி ஒன்றினை தற்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர் படக்குழுவினர். இது தற்போது ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு லைக்ஸ்களை குவித்து வருகிறது. இரண்டு அழகிகளும் ஒரே நேரத்தில் இப்படி போஸ் கொடுத்தால் யாரை தான் ரசிப்பது என செல்லமாக கோபித்துக் கொள்கிறார்கள் ரசிகர்கள்.  


 






 


புரோமோஷனில் பிஸி :


பொன்னியின் செல்வன் படக்குழுவினர் தற்போது தங்களின் படத்தின் விளம்பரத்திற்காக பெங்களூரில், ராஜாஜி நகரில் உள்ள ஓரியன் மாலில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். நாளை படத்தின் புரோமோஷன் பணிகளுக்காக ஹைதராபாத் செல்ல உள்ளனர் படக்குழுவினர்.