Deepika Padukone: ஆஸ்கர் விருது விழாவில் தீபிகா படுகோன்… பெருமைமிக்க பட்டியலில் இணைந்த இந்திய நடிகை!

95வது ஆஸ்கார் விருதுகள், மார்ச் 12, 2023 அன்று ஏபிசியில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்வில் தீபிகா படுகோன் விருது வழங்குபவர்களில் ஒருவராக இருப்பதை பார்க்கலாம்.

Continues below advertisement

ஆஸ்கர் விருது விழாவில் விருது வழங்குபவர்கள் என்னும் பெருமைமிகு பட்டியலில் பல முக்கிய நடிகர்களுடன் தீபிகா படுகோனும் இணைந்துள்ளார்.

Continues below advertisement

தீபிகாவின் புதிய மைல்கல்

உலகப் புகழ்பெற்ற சூப்பர் ஸ்டாராக வலம் வரும், தீபிகா படுகோன் பொழுதுபோக்கு துறையில் தனது உலகளாவிய செயல்பாடுகள் மூலம் புதிய புதிய மைல்கற்களை அமைத்து, ஒவ்வொரு அடியிலும் இந்தியாவை பெருமைப்படுத்தி வருகிறார். மேலும், பொழுதுபோக்குத் துறையில் திறமையைப் பாராட்டுவதற்காக, உலகின் மிகவும் மதிப்புமிக்க சர்வதேச நிறுவனமான அகாடமி விருதுகள், 2023 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த தீபிகா மீண்டும் தயாராக உள்ளார். 

எப்போது ஆஸ்கர் விருது விழா

எமிலி பிளண்ட், சாமுவேல் எல். ஜாக்சன், டுவைன் ஜான்சன், மைக்கேல் பி. ஜோர்டான், ஜானெல்லே மோனே, ஜோ சல்டானா, ஜெனிஃபர் கான்னெல்லி, ரிஸ் அகமது, மெலிசா மெக்கார்த்தி போன்ற பலருடன் தீபிகாவும் இந்த கவுரவ லிஸ்டின் ஒரு பகுதியாக இணைந்துள்ளார். 95வது ஆஸ்கார் விருதுகள் ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 12, 2023 அன்று ஏபிசியில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்வில் தீபிகா படுகோன் விருது வழங்குபவர்களில் ஒருவராக இருப்பதை பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்: Youtuber Gopi : பரிதாபமான கோபி சுதாகர் நிலைமை. போலி டாக்டர் பட்டம்.. ஏமாந்தது எப்படி? மனம் திறந்த கோபி..

இந்திய சினிமா முகமாக மாறும் தீபிகா

தீபிகா தற்போது உலகளவில் தனது சாதனைகளை அடிக்கடி செய்து வருகிறார், அவர் ஒரு புதிய பாதையில் பயணித்து பல சர்வதேச தளங்களில் புதிய மைல்கற்களை அமைத்து வருகிறார். கடந்த ஆண்டு கேன்ஸ் ஜூரியில் ஒரே இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, FIFA உலகக் கோப்பை கோப்பையை வெளியிட்டது, உலகின் முதல் முகமாக கையெழுத்திட்டது, என நடிகை இதற்கு முன்பு பலமுறை முக்கிய மேடைகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். மேலும் மிகப்பெரிய ஆடம்பர பிராண்ட் மற்றும் பல விளம்பரங்களிலும் தோன்றி வருகிறார்.

நாட்டு நாட்டு பாடல்

சர்வதேச அளவில் இத்தகைய தொழில்முறை மற்றும் தனிப்பட்ட சாதனைகள் மூலம், தீபிகா இந்திய சினிமா திறமைகளின் பிரதிநிதியாகவும், முகமாகவும் மாறியுள்ளார், மேலும் மார்ச் 13 அன்று அவர் நாட்டை மீண்டும் பெருமைப்படுத்துவதற்காக காத்திருக்கிறார். இதற்கிடையில், அந்த விருது விழாவில், ஆர்ஆர்ஆர் சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்களை தன் இசைக்கு ஏற்றவாறு நடனமாட வைத்த 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் மேடையில் நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளது. ஆசிய திரைப்படம் ஒன்றின் பாடல் ஒன்று ஆஸ்கர் மேடையில் நேரடியாக ஒளிபரப்பப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement