Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.


மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ்  420.76 அல்லது  0.71% புள்ளிகள் உயர்ந்து 59,330.02 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 129.75 அல்லது 0.75% புள்ளிகள் உயர்ந்து 17,451.65 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.  கடந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தையானது சரிவுடன் காணப்பட்ட நிலையில், இந்த வாரம் ஏற்றத்துடன் வர்த்தகம் இருப்பது முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


லாபம்-நஷ்டம்


எஸ்பிஐ, ஐடிசி, என்டிபிசி, டாடா ஸ்டீல், யுபிஎல், பவர்கிரிட் கார்ப், எச்சிஎல் டெக், ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், பிரிட்டானியா, பஜாஜ் ஆட்டோ, விப்ரோ, டெட்டன் கம்பெணி, பஜாஜ் பின்சர்வ், பாரதி ஏர்டெல், டெக் மகேந்திரா, மாருதி சுசிகி, எம்எம், பிபிசிஎல், எச்டிஎஃப்சி, லார்சன், ஹின்டல்கோ, கோடக் மகேந்திரா, கிராசிம், சிப்ளா, ஆக்சிஸ் வங்கி, கோல் இந்தியா, நெஸ்டீலே உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


சன் பார்மா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.