One Year Of Ayothi: ”ஒரு தெய்வம் பாக்க வந்து ஒரு தெய்வம் போச்சு இன்று” அயோத்தி படம் வெளியாகி ஓராண்டு நிறைவு

One Year Of Ayothi: அயோத்தி திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டு ஆகியுள்ளது.

Continues below advertisement

இயக்குநர், நடிகர் சசிகுமார் நடிப்பில், அ.மந்திரமூர்த்தி இயக்கத்தில் வெளியாகி சமீபத்தில் சர்ப்ரைஸ் ஹிட் அடித்த திரைப்படம் ‘அயோத்தி’.

Continues below advertisement

கடந்த ஆண்டு மார்ச் 3ஆம் தேதி வெளியாகி அனைத்து தரப்பினர் மத்தியிலும் லைக்ஸ் அள்ளிய அயோத்தி திரைப்படத்தின் மூலம் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி ஹீரோயினாக அறிமுகமாகி வரவேற்பைப் பெற்றார். இந்த படம் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டு ஆகியுள்ளது. இதனை நினைவு கூறும் விதமாக, இந்த படம் எனக்கு மிகவும் தேவைப்படும்போது எனக்கு கிடைத்தது. இந்த படம் எப்போதும் என் இதயத்தில் ஒரு வலுவான இடத்தைப் பிடிக்கும். இந்த அழகான பயணத்தில், குழு, படப்பிடிப்பின் போது ஏற்பட்ட நினைவுகள், படப்பிடிப்பின்போது கற்றுகொண்ட விஷயங்கள், கனவுகள், உணர்ச்சிகள், அற்புதமான ரசிகர்கள் என இந்த படத்தை வெற்றிப்படமாக்கிய ஒவ்வொருவருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. என்றென்றும் நன்றியுள்ள,

அன்பு,
ஷிவானி” என குறிப்பிட்டுள்ளார். 

மதங்களைத் தாண்டிய மனிதநேயத்தைப் போற்றும் படம் எனக் கொண்டாடப்பட்ட ‘அயோத்தி’ திரைப்படம். நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியாகி சைலண்ட் ஹிட் அடித்து பெரும் பாராட்டுக்களைக் குவித்த திரைப்படம்  ‘அயோத்தி’. ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் R. மந்திர மூர்த்தி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ,நடிகர் சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி, யஷ்பால் ஷர்மா மற்றும் புகழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். உலக திரைப்பட தகவல் தளமான ஐஎம்டிபி இணையதளத்தில் 8.5 மதிப்பீடு வழங்கப்பட்டு விமர்சனரீதியாக பாராட்டுகளை அள்ளியது.

அயோத்தியிலிருந்து ராமேஸ்வரத்திற்குச் சுற்றுலா செல்ல முடிவெடுக்கும் நான்கு பேர் கொண்ட குடும்பத்தைச் சுற்றி இப்படத்தின் கதை சுழல்கிறது. மதுரையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் கார் பயணத்தின்போது, ​​தேசபக்தர் பல்ராம் (யஷ்பால்) ஓட்டுநரிடம் தவறாக நடந்து கொள்கிறார், இருவருக்குமான வாக்குவாதத்தால் ஏற்படும் விபத்து, பல்ராமின் மனைவியின் மரணத்திற்கு வழிவகுத்து விடுகிறது. மீதிக் கதையானது, இரண்டு குழந்தைகள் தங்கள் அதீத மதவெறி பிடித்த  தந்தையின் கைகளில் படும் துன்பங்களையும், டிரைவரின் நண்பர்களான  இருவர் (சசிகுமார் மற்றும் புகழின் கதாபாத்திரங்கள்) தங்கள் தாயின் சடலத்தை எடுத்துச் செல்ல குழந்தைகளுக்கு உதவுவதையும் சித்தரிக்கிறது. எல்லா முரண்பாடுகளையும் மீறி அவர்களின் சொந்த ஊருக்கு எப்படிச் செல்கிறார்கள் என்பதே படம். மதங்களைத் தாண்டிய மனிதநேயம் போற்றும் காவியமாக இப்படம் அனைத்து தரப்பினராலும் பாராட்டுக்களைக் குவித்தது.

மதம், மூடநம்பிக்கைகள், ஆண்மைய மனப்பான்மை மற்றும் பல சமூக பிரச்சினைகளை இந்தக்கதை வழியே அழுத்தமாக பேசிய அயோத்தி திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் NT ரகுநந்தனின் பின்னணி இசை பக்கபலமாக அமைந்தது. மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு அயோத்தி மற்றும் ராமேஸ்வரத்தின் தோற்றத்தையும் உணர்வையும் மிக அழகாகப் படம்பிடித்திருந்தது. இந்நிலையில் பாசிட்டிவ் விமர்சனங்களை வாரிக்குவித்து ஹிட் அடித்த அயோத்தி திரைப்படம்  வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டு ஆகிறது. இப்படம் தற்போது ஜீ ஓடிடி தளத்தில் உள்ளது. 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola