Nithiya menon: ‛ஆடுகளத்தில் தனுஷ் கூட நடிக்க மறுத்துவிட்டேன்...’ -மனம் திறந்த நித்யா மேனன்!

நான் யாரையுமே உருவ கேலி செய்ய மாட்டேன் ஏனென்றால் எனக்கு அது நிறைய நடந்துள்ளது இது எப்படி வலிக்கும் என்பது எனக்கு தெரியும்.சமீபத்தில் ஒரு பிரபல சேனலுக்கு கொடுத்த நேர்காணலில் மனம் திறந்த நித்யா மேனன்.

Continues below advertisement

நித்யா மேனன் பெங்களூரில் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தவர் அதன் பிறகு தனது பட்டப்படிப்பை இத்தாலியில் படித்து முடித்தார். ஆரம்ப காலத்தில் நடிப்பதில் பெரிய ஆர்வம் இல்லை என்றும் ஒரு பத்திரிக்கையாளர் ஆக வேண்டும் என்பதுதான் எனக்கு கனவாக இருந்தது என்றும் ஒரு பிரபல தொலைக்காட்சியில் நேர்காணலில் குறிப்பிட்டு இருந்தார். எதார்த்தமாக சினிமாவிற்குள் நுழைந்த நித்யா மேனன்  தற்போது சவுத் இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். தமிழில் வெளியான ஓ காதல் கண்மணி திரைப்படத்தின் தாரா கதாபாத்திரம் அனைத்து வாலிபர் மனதிலும் இடம் கிடைத்தது தற்போது திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் ஷோபனா கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது இந்த சமயத்தில் பிரபல சேனலில் கொடுத்த நேர்காணலை இங்கே காணலாம்.

Continues below advertisement


கேள்வி: நீங்க நிறைய கதாநாயகிகள் கூட பயணம் செய்து இருக்கீங்க, அப்படி இருக்கும் பொழுது ஈகோ கிளாஸ் எங்கயாவது நடந்திருக்கா.

நித்யா மேனன்: பெரும்பாலும் ஹீரோயின்ஸ் எல்லாருமே ரொம்ப ஃப்ரெண்ட்லி, ஆனா இந்த பொறாமை எல்லாமே ஹீரோஸ் கிட்ட தான் இருக்கும்.

கேள்வி: ஒரு கதாநாயகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் இவ்வளவு உயரத்தில் பார்ப்பதற்கு ஜிரோ சைஸ்ல இருக்க வேண்டும் என்று ஒரு பிம்பம் இருந்தது அதையெல்லாம் உடைத்தெறிந்த ஒரு கதாநாயகியாக தான் நான் உங்களை பார்க்கிறேன் இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க.

நித்யா மேனன்: நான் பொதுவா யாரையுமே உருவ கேலி பண்ண மாட்டேன். ஏனென்றால் நான் அதை நிறைய அனுபவித்திருக்கிறேன் அதனால் எனக்கு இந்த கேள்விக்கு என்ன சொல்றதுன்னு தெரியல மக்களுக்கு புடிச்சிருக்கு என்பதால் தான் நான் இன்னைக்கு ஒரு ஹீரோயினா இங்க இருக்கேன்.

கேள்வி: உங்களுக்கு வரப்போற கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஏதாவது எக்ஸ்பெக்டேசன்ஸ் நீங்க வச்சிருக்கீங்களா.

நித்யா மேனன்: எனக்கு சரியா சொல்ல தெரியவில்லை நான் இன்னும் கல்யாணம் பத்தியெல்லாம் யோசிக்கவில்லை இப்போவரைக்கும் என்னோட லைஃப்ல நான் அப்படி ஒரு பையனை பார்க்கவில்லை அப்படி பார்த்தா அத பத்தி யோசிக்கலாம்

கேள்வி: உங்களுக்கு தனுஷ் கூட நடிப்பதற்கு இதுக்கு முன்னாடி சான்ஸ் கிடைச்சிருக்கா இல்ல திருச்சிற்றம்பலம் தான் முதல் படமா.

 

நித்யா மேனன்: எனக்கு தனுஷ் சார் கூட நடிக்க நிறைய சான்ஸ் வந்து இருக்கு ஆடுகளம் படத்துக்கு கூட என்னதான் முதலில் கேட்டாங்க அப்போ நான் கொஞ்சம் பிரேக் எடுத்து இருந்தேன் அதனால என்னால நடிக்க முடியல அதற்கு பிறகு தனுஷ் ஒரு நாள் எனக்கு போன் செய்து நான் உங்களை மனதில் நினைத்து ஒரு கதை எழுதி இருக்கேன் நீங்க நடிக்கிற என்று சொன்னால் அந்த கதையை ஸ்டார்ட் பண்ணிடுவேன் என்று சொன்னார் ஆனால் என்னால் அதை அப்போ நடிக்க முடியல அந்த கதை இன்னும் அப்படியே தான் இருக்கு இதற்கு அப்புறம் அந்த படம் வெளியாக வாய்ப்பு உள்ளது.

இதுபோல பல சுவாரசியமான கேள்விகளுக்கு தன் வெகுளி தனம் கலந்து பதில் சொன்னார் நித்யா மேனன்.

Continues below advertisement
Sponsored Links by Taboola