Nayanthara Fipola : பிரபல கடல் உணவு, இறைச்சி நிறுவனத்தின் பிராண்ட் தூதுவராகிறார் நயன்தாரா..

வரும் மாதங்களில், நயன்தாரா இடம்பெறும் ஒரு புத்தம் புதிய தொலைக்காட்சி விளம்பரம் மற்றும் பல தளங்களில் விளம்பரமும் காண்பிக்கப்படும்

Continues below advertisement

இறைச்சி மற்றும் கடல் உணவு பிராண்டான Fipola சந்தையில் தன்னை ஒரு முக்கிய பங்காக நிலைநிறுத்தும் முயற்சியில், பிரபல நடிகை நயன்தாராவை தனது பிராண்ட் அம்பாசிடராக நியமித்துள்ளதாக அந்த நிறுவனம் நேற்று, சனிக்கிழமை அன்று அறிவித்துள்ளது.

Continues below advertisement

இதை அடுத்து வரும் மாதங்களில், நயன்தாரா இடம்பெறும் ஒரு புத்தம் புதிய தொலைக்காட்சி விளம்பரம் மற்றும் பல தளங்களில் விளம்பரமும் காண்பிக்கப்படும் என்று நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். “நயன்தாரா போன்ற மிகவும் திறமையான மற்றும் ஆற்றல் மிக்க ஆளுமை ஒருவரை நியமிப்பதன் மூலம் இந்தியாவின் இறைச்சி மற்றும் கடல் உணவு பிரியர்களை ஈர்ப்பதை இந்த பிராண்ட் நோக்கமாகக் கொண்டுள்ளது. சினிமா எப்போதுமே இந்தியாவின் இதயத் துடிப்பாக இருந்து வருகிறது, மேலும் உணவுப் பிரியர்கள் தங்களுக்குப் பிடித்தமான திரைப்பட நட்சத்திரத்துடன் எளிதாகத் தங்களைப் பொருத்திக்கொள்ள முடியும்” என்று ஃபிபோலாவின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுஷில் கனுகோலு ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

ஜூலை மாத நிலவரப்படி, அந்த நிறுவனம் நாட்டின் தெற்கில் 100 இடங்களில் இயங்கிவருவதாக அவர் கூறினார். பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டது குறித்து நயன்தாரா கூறுகையில், “இந்த பிராண்ட் எதைக் குறிக்கிறது என்பதையும் வாடிக்கையாளர்களுக்கு புதிய இறைச்சி மற்றும் கடல் உணவுகளை வழங்குவதாக அவர்களின் வாக்குறுதியையும் நான் நம்புகிறேன். ஃபிபோலாவுடன் இணைந்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஏனெனில் இது தெற்கில் வேகமாக ஒரு கவனிக்கப்படும் பிராண்டாக மாறிவருகிறது மற்றும் இந்த பிராண்டுடன் நீண்ட மற்றும் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்" என்றார். 

 

நயன்தாரா அண்மையில்தான் தனது காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola