செய்தியாளர் ஒருவர் நடிகர் ரஜினியிடம் அடுத்த ப்ராசஸ் என்ன சார் என்று கேள்வி கேட்க, ஷூட்டிங்தான் என அவரின் ஸ்டைலில் சிரித்துக்கொண்டே சொன்னார். 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். படப்பிடிப்பிற்கான முந்தைய பணிகள் வேகமாக நடந்து வந்த நிலையில், படப்பிடிப்பு  ஆகஸ்ட் மாதம் தொடங்குவதாக படத்தின் இயக்குநர் விருது விழா ஒன்றில் தெரிவித்து இருந்தார்.






ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்தப்படத்தில், கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பதை அவரே உறுதிப்படுத்தியிருந்தார். படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்காமோகன், ரம்யா கிருஷ்ணன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாகவும், பிரியங்கா மோகன் முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது டெல்லிக்கு திடீரென்று பயணம் மேற்கொண்டார். 75-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை ஒட்டி டெல்லிக்குச் சென்ற தென்னக என்சிசி  குழந்தைகளை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திர பாபு உள்ளிட்ட பிரபலங்களையும் சந்தித்தார்.







இப்போது இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய சூப்பர் ஸ்டாரின் நலனை பற்றி விசாரித்த செய்தியாளரிடம், தான் நன்றாகவுள்ளதாக தெரிவித்து சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார் நடிகர் ரஜினி. இந்த வீடியோ வெளியானதை அடுத்து நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.