மைனா நந்தினி யோகேஷுக்கு கொடுத்த சேலஞ்சில்  துருவனுக்கு ஓடி ஓடி சாப்பாடு ஊட்டும் வீடியோ ரசிகர்களின் வியூஸ்களைப்பெற்று இணையத்தில் வைரலாகிவருகிறது.


விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் – மீனாட்சி சீரியலில் கிராமத்துப்பெண்ணான தாவணி பாவடையுடன் வலம் வந்து மக்கள் மனதில் இடம் பிடித்த நம்ம மைனா நந்தினி, தற்போது பல சீரியல்கள், திரைப்படங்கள், ரியாலிட்டி ஷோக்களில் கலக்கிவருகிறார். குறிப்பாக மிஸ்டர் அன் மிஸ்ஸல் சின்னத்திரையில் தனது கணவர் யோகேஷுடன் கலந்துகொண்டு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்கள். இதற்கு முன்னதாகவே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வா இருப்பதோடு , தன்னுடைய புகைப்படங்கள், ரீல்ஸ்கள் அவ்வப்போது வெளியிட்டு அசத்திவருவார்.



அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 40 லட்சத்திற்கு மேற்பட்டோர்கள் மைனா நந்தினியினைப் பின்தொடர்கின்றனர். இதோடு ரசிகர்களை மேலும் கவரும் விதமாக மைனா விங்ஸ் என்ற யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து பல்வேறு வீடியோக்களை பகிர்ந்துவருகிறார். இந்த சேனலுக்கு 772 k  சப்ஸ்கிரைப்பர்கள் உள்ள நிலையில், சில நேரங்களில் அவர்கள் பதிவு செய்யும் வீடியோக்கள் பல லட்சம் வியூவர்ஸுடன் டிரெண்டாகி வருகிறது.


தற்போது மைனா நந்தினி யோகிக்கு சேலஞ் கொடுத்த செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. வீடியோ ஆரம்பத்தில், நான் யோகிக்கு சேலஞ் கொடுத்து ரொம்ப நாள் ஆயிடுச்சு எனவும், இன்னைக்கு அவன் செய்யாத ஒரு விஷயத்தை எப்படியாவது பண்ண வைக்க வேணும் என்று ஆரம்பிக்கிறார்.  இதற்கு தன் மகன் துருவனுக்கு இதுவரை சாப்பாடு ஊட்டியதில்லை. எனவே இன்னைக்கு அது தான் நம்மளோடு சேலஞ்ச் என்று முடிவெடுத்து ஒரு ஸ்பெஷல் ரெசிபியை செய்ய ஆரம்பிக்கிறார். கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பூண்டு, இஞ்சி, சோம்பு,மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர், ஏற்கனவே ஊறவைத்த அரிசியை அதில் போட்டு காய்கறி சாதம் சமைக்கிறார்.


 



இதன்பின்னர் சிறிது நேரம் கழித்து யோகி வந்ததும், தன் மகன் துருவனை ஆசையாய் தூக்கி, சாப்பிட்டியா? என கேட்கிறார். அதற்கு மைனா இன்னைக்கு நீதான்  துருவனுக்கு சாப்பாடு ஊட்ட வேண்டும் எனவும் இது தான் உன்னோட சேலஞ் வீடியோ என்கிறார். இந்த சேலஞ்சை சவாலாக ஏற்றுக்கொண்ட யோகி,  துருவனுக்கு சாப்பாடு ஊட்டுவதற்காக அவர் பின்னாலேயே யோகியும் சேர்ந்து ஓடுகிறார். வீட்டிற்குள் சுற்றி சுற்றி ஓடிய நிலையில், வீட்டிற்கு வெளியில் வந்தும் சாப்பாடு ஊட்டுவதற்கு முயற்சிக்கிறார். பின்னர் துருவை தூக்கி வைப்பது சாப்பிடுடா என்று கூற துருவன் ஒரு வாய் சாதம் வாங்குகிறான். ஆனால் குழந்தைக்கு முழுமையான யோகியால் சாப்பாடு ஊட்டமுடியவில்லை. இறுதியில் தன் சேலஞ்சில் யோகி  தோற்றுவிடவே, இதை விட பெரிய சேலஞ் வீடியோ போட்டு நந்தினியைத் தோற்கடிக்க வேண்டும் என சவால் விடுகிறார்.


இறுதியில் நந்தினி, குழந்தைக்கு எப்படி சாப்பாடு ஊட்ட வேண்டும், இதற்கு அம்மாக்கள் படும் பாடு குறித்து வீடியோவில் தெளிவாக பேசியிருப்பார். மேலும் துருவனுக்கு யோகேஷ் பிடிக்கும் என்பதால் எப்படியோ,ஒரு வாய் சாதம் ஊட்டிவிட்டான் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களையுடன் இணையத்தில் வைரலாகிவருகிறது.