டோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் நாக சைதன்யாவிற்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகை சமந்தா உடனான திருமண பந்தத்தை முறித்த பிறகு நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வருவதாக செய்திகள் சோசியல் மீடியாவில் பரவி வந்தன. அவர்கள் இருவரும் ஒன்றாக விடுமுறையை கழித்து வருமாறும் அந்த சமயத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 



சோசியல் மீடியாவில் பரவும் வதந்தி :


ஏற்கனவே நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இருவரும் டேட்டிங் செய்து வருகிறார்கள் எனும் வதந்திகளை மேலும் எரிய விடும் வகையில் அவர்களின் புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது. இந்த புகைப்படம் குறித்து பலரும் தங்களின் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்தார்களா என்பதற்கான தெளிவு அந்த புகைப்படத்தில் இல்லை என்பதுதான் அதற்கான காரணம். 


 







எடிட்டிங் செய்யப்பட்ட புகைப்படம் :


ஒரு சிலர் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா டேட்டிங் செய்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி ட்ரோல் செய்து வந்தாலும் ஒரு சிலர் அதை முற்றிலுமாக மறுக்கிறார்கள். இந்த புகைப்படம் எடிட்டிங் செய்யப்பட்டதாக இருக்கலாம் என்பது ஒரு சிலரின் கூற்றாகும். அதற்கு காரணம் அவர்கள் இருவரும் இருக்கும் இடத்தின் தரை பகுதி எடிட்டிங் செய்தது போல தெரிகிறது. இருவரின் நடைபாதை பகுதியும் வித்தியாசமாக உள்ளது. இருப்பினும் இருவரும் ஒன்றாக டேட்டிங் செய்து வரும் புகைப்படங்கள் அவவ்போது வெளியானாலும் இதுவரையில் இது குறித்து இருவரும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


 






 


நாக சைதன்யா தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் 'கஸ்டடி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் நாக சைதன்யா. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. மறுபுறம் சோபிதா துலிபாலா, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி எனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.