வாரிசு படத்தின் அனைத்து உணர்வுப்பூர்வமான காட்சிகளையும் பார்த்து தான் அழுததாக இசையமைப்பாளர் தமன் ட்வீட் செய்துள்ளார்.


தமிழ், தெலுங்கில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் தயாராகியுள்ள விஜய்யின் வாரிசு படம் நாளை ஜனவரி 11ஆம் ரிலீசாக உள்ளது. குடும்ப செண்டிமெண்டை மையப்படுத்தி இந்தப் பொங்கல் ரிலீசாக வாரிசு படம் வெளியாக உள்ள நிலையில் விஜய் ரசிகர்களும் கோலிவுட் வட்டாரத்தினரும் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


தில் ராஜூ தயாரிப்பில், தமன் இசையில் வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார்.  பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.


இந்நிலையில், முன்னதாக வாரிசு படம் பார்த்து மகிழ்ந்த இசையமைப்பாளர் தமன் நடிகர் விஜய்யை குறிப்பிட்டு ட்விட்டரில் உணர்வுப்பூர்வமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.


விஜய்யை டேக் செய்து ”அனைத்து எமோஷனல் காட்சிகளையும் பார்த்து நான் இதயத்திலிருந்து அழுதேன் அண்ணா. கண்ணீர் விலைமதிப்பற்றது . 


வாரிசு திரைப்படம் எனது குடும்பம் அண்ணா. என் இதயத்துக்கு நெருக்கமான படம் இது. இந்த மிகப்பெரிய வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு நன்றி.லவ் யூ” எனப் பதிவுட்டுள்ளார்.


 






தமனின் இந்தப் பதிவு விஜய் ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் அள்ளி இணையத்தில் வைரலாகி வருகிறது.