HBD GV Prakash : ‛பிறை தேடும் இரவிலே..' : ஜி.வி.பிரகாஷின் டாப் 5 ஹிட்ஸ்!

ஜி.வி.பிரகாஷின் 34-வது பிறந்தநாளான இன்று, அவரது டாப் 5 ஹிட் பாடல்களை உங்களுக்கு நினைவூட்டுகிறோம்!

Continues below advertisement

1.உருகுதே.. மருகுதே...

Continues below advertisement

‛‛ஏ அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக் கதை பேசிப் பேசி விடியுது இரவு
ஏழுகடல் தாண்டித்தான் ஏழு மலை தாண்டித்தான்
எங்கருத்து மச்சான் கிட்ட ஓடி வரும் மனசு
நாம சேர்ந்து வாழும் காட்சி கோடி பார்க்கிறேன்
காட்சி யாவும் நிசமா மாற கூட்டி போகிறேன்
சாமி பார்த்துக் கும்பிடும் போதும்
நீதானே நெஞ்சில் இருக்கே...’’

இப்படி வரிகளில் காதலை கடத்தும் அந்த பாடலை கேட்டு அனைத்து வயதினரும் உருகினார்கள். நீங்களும் ஒரு முறை கேட்டு உருகுங்கள். 

 

2.அக்கம் பக்கம் யாருமில்லா...

‛‛நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன்
அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன்
தினம் உன் தலைகோதி
காதோரத்தில் எப்போதுமே உன்
மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கைகோர்த்து நான்
உன் மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்...’’

மயிலிறகால் வருடிய காற்றாய் வந்து செல்லும் பாடல்... அஜித்-த்ரிஷா ஜோடி உயிர்ப்பித்திருக்கும். நீங்களும் பாருங்கள்!

3.உன் பேரை சொல்லும் போதே...

நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்

நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்

என் உலகம் தனிமை காடு, நீ வந்தாய் பூக்களோடு
என்னை தொடரும் கனவுகளோடு, பெண்ணே பெண்ணே …

நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …’’

அங்காடித்தெருவில் அழகையும், தன் மனம் கவர்ந்தவள் அழகையும் அழகாய் கடத்தியிருக்கும் பாடல்! கேளுங்கள் நீங்களும் கடந்து போவீர்கள்!

4.ஆருயிரே ஆருயிரே...

‛‛விழி தாண்டி போனாலும்

வருவேன் உன்னிடம்
எங்கே நீ தொலைந்தாலும்
நெஞ்சில் உன் முகம்
காற்றினில் மாறுதே
சுவாசத்தில் சேருதோ
நீ சுவாசிக்கும்போதும் வெளிவரமாட்டேன்
உனக்குள் வசிப்பெனே
உன்னிலே என்னுயிரே உனக்கும் என்னுயிரே
உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
என்னிலே உறைகிறேன்...’’
மதராசபட்டினம் படத்தில் வரும் இந்த பாடல் கேட்டு உருகவில்லை என்றால் அந்த இதயத்தில் காதல் இல்லை என்று தான் அர்த்தம். 

5.பிறை தேடும் இரவிலே...

‛‛அழுதால் உன் பார்வையும்
அயந்தால் உன் கால்களும்
அதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா
என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பனி..
உனக்கென என மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி...’’

இரவுக்கு இதை விட இனிமையான பாடலை கேட்க முடியாது. மயக்கம் என்ன படத்தில் வரும் இந்த பாடல், உண்மையில் மயக்கம் தரும். 

Continues below advertisement
Sponsored Links by Taboola