மன்சூர் அலிகான் மகன் கஞ்சா பயன்படுத்தியது உறுதி - வெளியான மருத்துவ அறிக்கையால் பரபரப்பு

இதையடுத்து போலீசார் குறிப்பிட்ட இடத்தில் அதிரடி சோதனை நடத்தி கல்லூரி மாணவர்கள் 5 பேர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.

Continues below advertisement

மன்சூர் அலிகான் மகன் துக்ளக் அலிகான் கஞ்சா பயன்படுத்தியது மருத்துவ அறிக்கையில் உறுதியாகியுள்ளது. 

Continues below advertisement

மன்சூர் அலிகான் மகன் துக்ளக் அலிகானின் சிறுநீர் மாதிரி பரிசோதனையில் கஞ்சா பயன்படுத்தியது உறுதியாகி உள்ளதாக மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது. மெத்தம்பெட்டமைன், கொக்கைன் உள்ளிட்டவை பயன்படுத்தவில்லை என்றும் மருத்துவ அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. 

இதனிடையே மன்சூர் அலிகான் இதுகுறித்து கூறுகையில், ஏற்கெனவே கைதானவர்களின் செல்போனில் இருந்த எண்கள் அடிப்படையில்தான் மகன் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் போதை பொருள் பயன்படுத்தினாரா என்பது குறித்து தெரியவில்லை எனவும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில்தான் மன்சூர் அலிகான் மகன் துக்ளக் அலிகானின் சிறுநீர் மாதிரி பரிசோதனையில் கஞ்சா பயன்படுத்தியது உறுதியாகி உள்ளதாக மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது. 

முன்னதாக, போதை பொருள் ஒழிப்பில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. தமிழக காவல்துறையும் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

போதை பொருள் ஒழிப்பில் தனி கவனம் செலுத்தி வருகிறது. ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சிலரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் காட்டாங்கொளத்தூரை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் குறிப்பிட்ட இடத்தில் அதிரடி சோதனை நடத்தி கல்லூரி மாணவர்கள் 5 பேர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் பதிவான எண்களை கொண்டு விசாரணை நடைபெற்றது. 

இதனடிப்படையில் தான் பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் போலீசில் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது செல்போனில் அவர் போதை பொருள் பயன்படுத்தியது தொடர்பான வீடியோக்கள் சிக்கியது. 

அவருடன் சேர்ந்து 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை போலீசார் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 18ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola