தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இவரது அண்ணன் நரேஷ் பாபுவும் பிரபலமான நடிகர்தான். 60 வயதாகும் நரேஷ் பாபுவிற்கு இதுவரையில் மூன்று முறை திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் நான்காவதாக அவர் நடிகை ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் , அவர் சம்பந்தப்பட்ட நடிகையுடன் ஹோட்டலில் கையும் களவுமாக மனைவியிடம் பிடிபட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






செருப்பால் அடிக்க பாய்ந்த  மனைவி :


நரேஷ் பாபு  இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். மூன்றாவதாக ரம்யா என்பவரை திருமணம் செய்துக்கொண்டர். சமீப காலமாக இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில் ,பிரபல கன்னட நடிகை பவித்ரா லோகேஷை அவர் நான்காவதாக திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது. இதனை தொடர்ந்து நடிகை பவித்ராவும் நரேஷும்  மைசூரில் பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மனைவி ரம்யா அங்கே சென்று இருவரையும் கையும் களவுமாக பிடித்திருக்கிறார்.  வெகு நேரமாக  நரேஷ் கதவை திறக்காமல் இருக்க , ஊழியர்களின் உதவியுடன் ரம்யா கதவை திறந்திருக்கிறார்.


ரம்யாவின் ஆதங்கத்தை பொருட்படுத்தாத நரேஷ் கூலாக அங்கிருந்து விசில் அடித்துக்கொண்டு, சிரித்துக்கொண்டே செல்கிறார்.  ஆத்திரமடைந்த மனைவி ரம்யா தனது கணவரை செருப்பால் அடிக்க முயன்ற காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது.







நரேஷ் விளக்கம்:


இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து நரேஷ் , தனது மனைவி தன்னை மிகுந்த சித்ரவதை செய்வதாகவும் பணம் கேட்டு பிளாக் மெயில் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில்தான் அவருக்கு 10 லட்சம் பணம் கொடுத்தேன் மீண்டும் மீண்டும் என்னை தொந்தரவு செய்கிறார். நான் இதுவரையில் 200-க்கும் அதிகமான படங்களில் 100-க்கும் மேற்பட்ட பெண்களுடன் நடித்திருக்கிறேன். என்னை யாருமே இப்படி தவறாக கூறியதில்லை என தெரிவித்துள்ளார்.